தத்து எடுக்கவில்லை... விவாகரத்திற்கு பின் பெற்றெடுத்த குழந்தை… நடிகை ரேவதி விளக்கம்!
சென்னை : பொத்தி வச்ச மல்லிகை மொட்டு...பூத்திருச்சு வெக்கத்த விட்டு என்ற பாடலில்... அனைத்து சிணுங்கலையும் , முகபாவத்தையும் காட்டி மனதில் பசைபோல் ஒட்டிக்கொண்டவர் ரேவதி.
80களில் கனவு கன்னியாக வலம் வந்த ரேவதி பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்தார்.
சமீபத்தில் இவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், அனைவரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

மண்வாசனையில் அறிமுகம்
1983ம் ஆண்டு பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் மண்வாசனை இத்திரைப்படத்தில் முத்துப்பேச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரேவதி. முதல் திரைப்படமே சும்மா அமர்க்களமான திரைப்படமாக அமைந்தது ரேவதிக்கு. இந்த திரைப்படம் பல நாட்கள் திரையரங்குகளில் ஓடின.

ஹிட் படங்கள்
முதல்படத்திலேயே அனைவரின் பாராட்டை பெற்ற ரேவதிக்கு படவாய்ப்புகள் குவியத் தொடங்கின. புதுப்பெண், வைதேகி காத்திருந்தாள், ஆண்பாவம், ஒரு கைதியின் டைரி, கன்னி ராசி, பகல் நிலவு, மௌனராகம் என வெளியான அனைத்து திரைப்படங்களும் ஹிட்டோ ஹிட் அடித்தன.

முன்னணி நடிகர்களுடன்
கமல், ரஜினி மட்டுமின்றி விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், முரளி, மோகன், ராமராஜன் என்று அன்றைய ஹீரோக்கள், அன்றைய இயக்குநர்கள் என அனைத்து படங்களிலும் எல்லாருடனும் நடித்து மிகப்பெரிய ரவுண்டு வந்தார் ரேவதி.

விவகாரத்து பெற்றனர்
1988ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் சுரேஷ் மேனன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் 27வருடங்கள் மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். இருப்பினும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் இவர்களுக்கு இடையே அவ்வப்போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 2002ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
Recommended Video

பெற்றெடுத்த குழந்தை
இந்நிலையில், நடிகை ரேவதி, அனைவரும் வாய் பிளக்கும் வகையில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். விவகாரத்து ஆன பின், எனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாக அறிவித்தேன். அந்த குழந்தையை நான் தத்து எடுத்ததாக பலரும் கூறுகின்றனர். உண்மையில் அது தத்து எடுத்த பிள்ளை இல்லை டெஸ்ட் டியூப் வழியாக கருவுற்று நான் பெற்றெடுத்த குழந்தை என்று கூறியுள்ளார். பலரும் இவளை நான் தத்து எடுத்து வளர்த்து வருவதாக தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications











