Don't Miss!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- News
"எலும்புக்கூடா" போச்சே.. குளக்கரையில் காருக்குள் ஜோடி.. திடீர்னு அந்த சம்பவம்.. விக்கித்த காஞ்சிபுரம்
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
3 வருடம் ஒருவரை காதலித்தேன்.. அவரின் போனுக்காக பல மணி நேரம் காத்திருந்தேன்.. மனம் திறந்த சாக்ஷி!
சென்னை : மாடல் மற்றும் நடிகையுமான சாக்ஷி அகர்வால், காலேஜில் படிக்கும் போது, ஒருவரை உருகி உருகி காதலித்ததாக கூறியுள்ளார்.
நடிகை சாக்ஷி அகர்வால், விஸ்வாசம், காலா என டாப் ஸ்டார்களின் படங்களில் தலை காட்டி இருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் தான்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆர்யாவின் நடிப்பில் வெளிவந்த டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் ஒரு சில கதாபத்திரங்களில் ஏற்று நடித்துள்ளார்.
மீண்டும் இணையும் மாநாடு கூட்டணி... சூப்பரான விஷயமா இருக்கே!

மாடல் அழகி சாக்ஷி அகர்வால்
மாடல் அழகி சாக்ஷி அகர்வால் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ கோல்டு மெடல் மாணவி நான். ஒரு எம்.எல்.சி நிறுவனத்தில் நல்ல வேலை, நல்ல சம்பளம் தான் வாங்கிக்கொண்டு இருந்தேன். இருந்தாலும், ஏதோ ஒன்று வாழ்க்கையில் மிஸ் ஆவது போல் இருந்தது. அப்போது ஒரு விளம்பரத்திற்கு மாடலாக சென்றேன். அது ஒர்க் அவுட் ஆகிவிட்டதால் சினிமாவில் செட்டிலாகிவிட்டேன்.

அழகான காதல்
தொடர்ந்து பேசிய சாக்ஷி, கல்லூரியில் படிக்கும் போது தனக்கு வந்த காதல் அனுபவத்தை ரசித்து ரசித்து கூறினார். கல்லூரி பருவத்தில் எனக்கும் காதல் வந்தது. அந்த காதல் உண்மையில் ஒரு அழகான காதல். நான் காதலித்த நபர் மிகவும் ரசிக்கக்கூடியவர். கல்லூரி ரொம்ப கண்டிப்பான கல்லூரி என்பதால் அதிகம் பேசமுடியாது. இதனால், கண்களால் மட்டுமே எங்கள் காதல் வளர்ந்தது என்றார்.

அவருக்காக காத்திருந்தேன்
மூன்று ஆண்டுகள் இப்படித்தான் எங்கள் காதல் சென்றது. மாதத்தில் என்றாவது ஒருநாள் காஃபி ஷாபில் சந்தித்து பேசுவோம். அவர் கல்லூரியின் ஹாஸ்டலில் இருந்ததால் யாருக்கும் தெரியாமல் காலேஜ் முடிந்த பிறகு போன் பேசுவார். இந்த போனுக்காக நான் போனை பக்கத்தில் வைத்துக்கொண்டு பல மணிநேரம் காத்து இருந்தேன். அது வாழ்க்கையில் மிகவும் அழகான தருணம். காதலனை பார்ப்பதற்காக காத்திருப்பது, பேசுவதற்காக ஏங்குவது காதலின் அழகு அது இப்போது இருக்கும் இளம் காதலர்களுக்கு இல்லை என்றார்.

இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு
இந்த பேட்டியைப் பார்த்த ரசிகர்கள் பலர் அந்த காதலர் யார் என்றும், என்னது இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என்று கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். எது எப்படியோ மூன்று வருஷமா ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டுமே என்று சாக்ஷியின் தீவிர ரசிகர்கள் அவருக்கு சிபாரிசு செய்து வருகின்றனர்.