Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அன்னைக்கு அப்படி சொன்னாங்களே... சினிமா 'ரிடையர்மென்ட்' பற்றி நடிகை சமந்தா திடீர் விளக்கம்
Recommended Video
சென்னை: இன்னும் இரண்டு மூன்று வருடங்கள்தான் சினிமாவில் நடிப்பேன் என்று கூறியிருந்த நடிகை சமந்தா இப்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழில், பாணா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, தங்கமகன், தெறி, சீமராஜா, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல படங்களில் நடித்தவர் சமந்தா.
தெலுங்கிலும் நடித்து வருகிறார். பல தெலுங்கு படங்களில் நடித்துள்ள அவர், நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தபோது காதலில் விழுந்தார். இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன்.
மாஸ்டர் படத்துலையும் விஜய் கைதியா? ஒரு குட்டி கதை கேட்டு சாமியாட தயாரா.. நாளைக்கு இருக்கு சம்பவம்!
தமிழ், தெலுங்கில் பிசி
சில வருடங்களாகக் காதலித்து வந்த அவர்கள், கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணம் கோவாவில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார் சமந்தா. தமிழ், தெலுங்கில் பிசியாக இருக்கிறார். இப்போது தமிழில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்துள்ளார்.
சமந்தாவின் நடிப்பு
தமிழில் த்ரிஷா நடித்த கேரக்டரில், சமந்தா நடித்திருந்தார். தமிழில் இயக்கிய பிரேம்குமார், தெலுங்கிலும் இயக்கியுள்ளார். ஜானு என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆகி, வரவேற்பை பெற்றுள்ளது. நடிகை சமந்தாவின் நடிப்பை ரசிகர்கள் புகழ்ந்துள்ளனர்.
2, 3 வருடங்கள்
இந்நிலையில் இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் மட்டும்தான் சினிமாவில் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார் சமந்தா. ஜானு படத்தின் புரமோஷனுக்காக செய்தியாளர்கள் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தபோது இதுபற்றி அவர் பேசினார். 'எனக்குத் திருமணமாகிவிட்டது. நானும் என் குடும்பம் பற்றி யோசிக்க வேண்டும். அதனால்தான் 2, 3 வருடத்துக்குப் பின் சினிமாவில் இருந்து விலகிவிட முடிவு செய்துள்ளேன். நான் நடித்து அடுத்து வெளிவரும் படங்களில் என்றும் நினைவில் நிற்கும்படி இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
விளக்கம்
சமந்தாவின் இந்தப் பேட்டி பரபரப்பானது. அனைத்து மீடியாவிலும் இந்தச் செய்தி வெளியானது. இதையடுத்து அவர் விளக்கம் அளித்துள்ளார். நான் சொன்னது, கடந்த 10 வருடமாக சினிமாவில் இருக்கிறேன். சவால்கள் நிறைந்த இந்த துறையில் நீடிப்பது கடினம் என்று சொன்னேன். நடிகையாக இல்லாவிட்டால், சினிமாதுறையில் வேறு துறையில் இருப்பேன் என்றார்.