Don't Miss!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அவதூறு செய்தி வெளியிட்ட யூட்யூப் சேனல்ஸ்... வழக்கு தொடர்ந்த நடிகை சமந்தா.. பரபரப்பு!
சென்னை: தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட சில யூட்யூப் சேனல்கள் மீது நடிகை சமந்தா வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகை சமந்தாவும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவும் கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
எக்சைட்டிங்கா ஏதாவது பண்ணுங்க...டபுள் கேம் ஆடும் அபிஷேக்
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் சமூக வலைதளம் மூலம் தங்களின் விவாகரத்தை அறிவித்தனர்.
அவதூறு செய்திகள்
அதனை தொடர்ந்து நடிகை சமந்ததா பேசு பொருளாகி விட்டார். அவரது விவாகரத்தை சுற்றி பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. சமந்தா வெப் சீரிஸ்களிலும் படங்களிலும் ஆபாசமாக நடித்ததாகவும், அவர் கருக்கலைப்பு செய்ததாகவும் மேலும் ஆடை வடிவமைப்பாளருடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
யூட்யூப் சேனல்கள் மீது வழக்கு
இந்நிலையில் தன்னைப்பற்றி அவதூறு செய்திகளை வெளியிட்ட சில யூட்யூப் சேனல்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை சமந்தா. அதன் படி தெலுங்கு யூட்யூப் சேனல்களான சுமன் டிவி, தெலுகு பாப்புலர் டிவி, மற்றும் சில யூட்யூப் சேனல்கள் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கறிஞருக்கு நோட்டீஸ்
இதுதொடர்பாக அந்த யூட்யூப் சேனல்களுக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தன்னைப்பற்றியும் தனது திருமண வாழ்க்கை மற்றும் அவருக்கு தவறான தொடர்பு இருப்பதாக கூறி தரக்குறைவாக பேசிய வழக்கறிஞர் வெங்கட் ராவுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை சமந்தா.
அனுமதிக்க மாட்டேன்
நாக சைதன்யாவிடம் இருந்து விவாகரத்துக்குப் பிறகு, சமந்தா இணைய தளத்திலும் குறிவைக்கப்படுகிறார். தன்னைப்பற்றிய நெகட்டிவான செய்திகள் பரவியதை தொடர்ந்து மற்றவர்கள் தன்னிடமிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக்கொண்டார் சமந்தா. மேலும் தான் எந்த விதமான எதிர்மறையும் தன்னை உடைக்க அனுமதிக்க மாட்டேன் என்றும் கூறினார்.
தானே எதிர்கொள்ளும் சமந்தா
சமந்தாவுக்கு எதிராக தவறான செய்திகள் பரவி வந்த போது அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவோ அல்லது அவரது தந்தை நாகார்ஜுனாவோ சமந்தாவுக்கு ஆதரவாக நிற்கவில்லை. இந்நிலையில் தன் பிரச்சனையை தானே எதிர்கொள்ளும் வகையில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை சமந்தா.