Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அம்மாடியோவ்... இவ்வளவு சம்பளமா வாங்குகிறார் நடிகை சமந்தா?
சென்னை: நடிகை சமந்தாவின் சம்பளத்தை கேட்பவர்களுக்கு தலை சுற்றலே ஏற்பட்டுவிடும்.
பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சமந்தா. ஆனால் நான் ஈ படத்தின் மூலம்தான் பிரபலமானார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள போதே திருமணம் செய்துக்கொண்டார் சமந்தா. 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
மார்க்கெட் டவுன்
திருமணத்திற்கு பிறகும் சமந்தா சினிமாவில் பிஸியாக உள்ளார். பல நடிகைகளுக்கு திருமணத்திற்கு பிறகு மார்க்கெட் டவுன் ஆகிவிடும். அல்லது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடிக்க சென்று விடுவார்கள்.
ஓ பேபி படம்
இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு திருமணத்திற்கு பிறகுதான் மார்க்கெட் உச்சத்தை தொட்டுள்ளது. அண்மையில் சமந்தா நடித்த ஓ பேபி படம் ரிலீஸானது.
அதிக கலெக்ஷன்
இந்த படம் ரிலீஸான ஒரு வாரத்திலேயே 17 கோடி ரூபாய் வசூலை அள்ளியதாக கூறப்படுகிறது. ஹீரோயினை மையப்படுத்தி வெளிவந்த படங்களிலேயே இதுதான் அதிக கலெக்ஷனை அள்ளிய படம் என கூறப்படுகிறது.
சாதகமாக
இந்நிலையில் இந்த படத்தின் வசூல் தற்போது வரை 40 கோடியை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வாய்ப்பை சாதகமாக பயன்படுத்தி கொள்கிறார் சமந்தா.
சம்பளம் உயர்வு
அதாவது தனது சம்பளத்தை மூன்று கோடி ரூபாயாக உயர்த்தியுள்ளாராம். தயாரிப்பாளர்களும் சமந்தா கேட்கும் சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.