Samantha: என்ன சமந்தா இதெல்லாம்? நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோ..ஷாக்கான பேன்ஸ்!
சென்னை: நடிகை சமந்தா விவாகரத்திற்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி வந்த நிலையில், தற்போது மொத்தமாக கவர்ச்சியில் குதித்து நீச்சல் உடையில், அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். இவரின் கவர்ச்சி தரிசனத்தால்,இவரின் இன்ஸ்டாகிராம் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த பெண்ணான நடிகை சமந்தாவிற்கு, நடிப்பின் மீது இருந்த தீராத காதலும், நடிகை ஆகியே தீரவேண்டும் என்கிற முனைப்பும், இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு படத்தின் வாய்ப்பை பெற்று தந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் படு பிஸியான நடிகையாக மாறினார் சமந்தா.

இதன்பிறகு தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வர, விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ச்சியாக நடித்து வருகின்றார். இவர் முதல் படத்தில் தன்னுடன் நடித்த நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை சமந்தா நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இருவரும் அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இவர்களது விவாகரத்துக்கான உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விவாகரத்து முடிவால், சமந்தா மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் என்பது உண்மை. இதற்கிடையில், விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து, சமந்தா படங்களில் பிஸியாகிவிட்டார்.

நடிகை சமந்தா: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, பல சிகிச்சைக்கு பிறகு அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார். தனக்கு இருக்கும் நோயானை பொருட்படுத்தாமல் கையெழுத்திட்ட படங்களை நல்ல படியாக முடித்துவிட்டார். இப்போது முழு ஓய்வு எடுத்து வரும் சமந்தா, சிட்டாடல் இந்தியா தொடரின் படப்பிடிப்பை முடித்த பிறகு, அவர் நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று. ஒரு வருடத்திற்கு எந்த வேலையும் செய்ய மாட்டேன் என உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

நீச்சல் உடையில்: தற்போது மலேசியாவில் இருக்கும் சமந்தா, ரெசார்ட்டில் பிரவுன் கலர் உள்ளாடைகளை மட்டும் அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். சிட்டாடல் வெப்சீரிஸில் சமந்தா படுக்கை அறை காட்சியில் நடித்ததாக சொல்லப்பட்ட நிலையில், இந்த நீச்சல் உடை போட்டோவை பார்க்கும் போது, இது உண்மையாக இருக்குமோ என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்ன சமந்தா: இயற்கையான முறையில் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். இந்த போட்டோவை பார்த்து சிலர் குஷியானாலும், சிலர், இதெல்லாம் என்ன சமந்தா என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். மேலும், நாக சைதன்யா இதைப்பார்த்த எப்படி கதறி அழுவார் என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











