Don't Miss!
- Finance கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!
- News கடையில் கைவரிசை! ரூ.13,000க்காக இந்தியாவின் மானத்தை வாங்கிய மாணவிகள்.. அமெரிக்க போலீஸ் கொடுத்த ஷாக்
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கேம் ஷோவில் 25 லட்சத்தை வென்ற சமந்தா.. பணத்தை வெச்சி என்ன செய்வது...மனநிம்மதி இல்லை !
ஆந்திரா : தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா ஒரு மணி நேரத்திலேயே 25 லட்சம் ரூபாயை சம்பாதித்தார்.
எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற நிகழ்ச்சியை ஜூனியர் என் டிஆர் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா பல கேள்விகளுக்கு சரியான பதிலளித்து 25 லட்சத்தை வென்றார்.
வெளியானது ஜாங்கோ படத்தின் மிரட்டலான ட்ரெயிலர்!
இந்த நிகழ்ச்சி அக்டோபர் 15 ஆம் தேதி தசரா பண்டிகை அன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.
முன்னணி நடிகை
தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா நாகர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
பிரிகிறோம்
சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருமே கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிவதாக தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் தெரிவித்திருந்தனர். பல உரையாடல்கள் மற்றும் யோசனைகளுக்கு பிறகு நானும் சாயும் கணவன் மனைவி என்ற உறவில் இருந்து பிரிந்து இருவருடைய தனிப்பாதையில் பயணிக்க முடிவு செய்துள்ளோம். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுக்குள் அழகான நட்பு உள்ளது. அது இனியும் தொடரும் என அதில் இருவருமே குறிப்பிட்டு இருந்தார்கள். இது அவர்களின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ரூ 25 லட்சம்
இந்நிலையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகி வரும் எவரு மீலோ கோடீஸ்வரலு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமந்தா ஒரு மணி நேரத்தில் 25 லட்சத்தை வென்றார். அதில், பல விதமான கேள்விகளுக்கு சமந்தா சரியான பதில்களை அளித்து 25 லட்சத்தை வென்றுள்ளார். அதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது.
Recommended Video
மன வேதனையில்
மேலும் இந்த 25 லட்சத்தை என்ன செய்யப்போகிறார் என ரசிகர் கேட்ட கேள்விக்கு புன்னகையுடன் சிரித்துக்கொண்டே நிகழ்ச்சியின் முடிவுக்கு சென்றார். ஒரு பக்கம் வருமானத்தில் கொடிகட்டிப் பறந்தாலும் மற்றொரு பக்கம் தாங்க முடியாத மன வேதனையில் தவித்து வருகிறார் சமந்தா. விவாகரத்து அறிவிப்புக்கு பின்னரே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நெட்டிசன்ஸ்கள் பலர் பணத்தை வெச்சு என்ன செய்வது சமந்தாவுக்கு மனதில் நிம்மதி இல்லையே என்று வருத்தத்துடன் பேசி வருகின்றனர்.