twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “நான் கர்ப்பமாக இருந்தபோது கூட நடிகர்கள் சிலர் படுக்கைக்கு அழைத்தனர்”.. ஷாக் தரும் சூர்யா ஹீரோயின்

    திரையுலகைச் சேர்ந்த சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

    |

    Recommended Video

    Actress Sameera reddy: நடிகை சமீரா ரெட்டி புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது- வீடியோ

    சென்னை: கர்ப்பமாக இருந்தபோதுகூட திரையுலகைச் சேர்ந்த சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்தனர் என நடிகை சமீரா ரெட்டி புகார் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதனைத் தொடர்ந்து நடுநிசி நாய்கள், அஜித்துடன் அசல், மாதவனுடன் வேட்டை போன்ற படங்களில் நடித்தார்.

    தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்த சமீரா ரெட்டி, அக்‌ஷய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு நடிப்பதில் இருந்து விலகினார். ஏற்கனவே இத்தம்பதிக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மீண்டும் சமீரா கர்ப்பமாக இருக்கிறார்.

    இந்நிலையில், படங்களில் நடித்த போது சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக சமீரா கூறியிருப்பது தமிழ் மற்றும் இந்தி படவுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    கடைசி நேரத்தில்... திடீரென ரத்தானது '100' பட ரிலீஸ்... அப்செட்டில் படக்குழு! கடைசி நேரத்தில்... திடீரென ரத்தானது '100' பட ரிலீஸ்... அப்செட்டில் படக்குழு!

    நடிப்பிற்கு முற்றுப்புள்ளி:

    நடிப்பிற்கு முற்றுப்புள்ளி:

    இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "நான் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவை விட்டு வெளியேறி விட்டேன். எதற்காக நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு விலகினேன் என்பதை தெரிந்துகொள்ள ஒருவர்கூட ஆர்வம் காட்டவில்லை. இதனால் திரையுலகமே இப்படித்தான் என்று முடிவு செய்துகொண்டேன்.

    பெண்களுக்கு பாதுகாப்பில்லை:

    பெண்களுக்கு பாதுகாப்பில்லை:

    சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைகள் ஒருபோதும் இருந்தது இல்லை. என்னை பல தடவை நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்கள். நான் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட படுக்கைக்கு அழைத்தனர்.

    பாலியல் துன்புறுத்தல்கள்:

    பாலியல் துன்புறுத்தல்கள்:

    இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நடிகைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளன. இந்த நிலைமை மாற வேண்டும். ஆனால் அது மெதுவாகத்தான் நடக்கும்." என சமீரா ரெட்டி கூறியுள்ளார்.

    மீடூ புகார்:

    மீடூ புகார்:

    ஏற்கனவே திரையுலகைச் சேர்ந்த பலர் மீடூ புகார் கூறியுள்ளனர். அந்த வரிசையில் முன்னணி நாயகியாக இருந்த சமீராவும் அதே போன்று புகார் தெரிவித்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் யாரையும் சமீரா பெயர் குறிப்பிட்டு குற்றம் சாட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Actress Sameera reddy said that many director and actors approached her with sexual intentions.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X