Don't Miss!
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- News பிரமாண பத்திரம் தாமதாக பதிவேற்றம்? தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்பு மனு நிறுத்திவைப்பு
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகை சனாகான் மீது போலீசில் மீண்டும் புகார்... கைதாவாரா?
மும்பை: பிரபல நடிகை சனா கான் மீது போலீசில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார் பூனம் கண்ணா. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழில் சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் சனாகான்.
தனது உறவினரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி 15 வயது பெண்ணை கடத்தியதாக ஏற்கனவே சனா கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனை சனாகான் மறுத்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
பின்னர் பெண் பத்திரிகையாளர் பூனம் கண்ணாவுக்கும், சனாகானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சனாகானும், அவரது நண்பர்கள் இஸ்மாயில்கான், ராமுகனோஜியா ஆகியோர் தன்னை மோசடி பேர்வழி என சித்தரித்து இன்டர்நெட்டில் செய்தி பரப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் பூனம் கண்ணா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சனா கானையும், இஸ்மாயிலையும் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
இதைத் தொடர்ந்து பூனம் கண்ணா வீடு வாங்கி தருவதாக ஏமாற்றி என்னிடம் பல லட்சங்கள் மோசடி செய்துவிட்டார் என்றும் சனாகான் போலீசில் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி பூனம் கண்ணாவை கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்த நிலையில் சனாகான் மீது பூனம் கண்ணா, இன்னொரு புதிய புகாரை போலீசில் அளித்துள்ளார். அதில் தன்னிடம் சனாகான் பணமோசடி செய்துவிட்டதாகவும், அடியாட்கள் வைத்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் சனாகான் மீண்டும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார்.