Don't Miss!
- News கொய்யாப்பழத்தை பார்த்ததுமே.. பாய்ந்து வந்த 2 ஆடுகள்.. பின்னாடியே ஓடிசென்ற முருகன்.. திணறிய தென்காசி
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகை சனாகான் மீது போலீசில் மீண்டும் புகார்... கைதாவாரா?
மும்பை: பிரபல நடிகை சனா கான் மீது போலீசில் மீண்டும் புகார் கொடுத்துள்ளார் பூனம் கண்ணா. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழில் சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சனாகான். தம்பிக்கு இந்த ஊரு, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த இரு ஆண்டுகளாகவே தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் சனாகான்.
தனது உறவினரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி 15 வயது பெண்ணை கடத்தியதாக ஏற்கனவே சனா கான் மீது குற்றம்சாட்டப்பட்டது. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதனை சனாகான் மறுத்தார். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றார்.
பின்னர் பெண் பத்திரிகையாளர் பூனம் கண்ணாவுக்கும், சனாகானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சனாகானும், அவரது நண்பர்கள் இஸ்மாயில்கான், ராமுகனோஜியா ஆகியோர் தன்னை மோசடி பேர்வழி என சித்தரித்து இன்டர்நெட்டில் செய்தி பரப்புவதாகவும், மிரட்டல் விடுப்பதாகவும் பூனம் கண்ணா போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணை நடத்தி சனா கானையும், இஸ்மாயிலையும் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுதலையானார்கள்.
இதைத் தொடர்ந்து பூனம் கண்ணா வீடு வாங்கி தருவதாக ஏமாற்றி என்னிடம் பல லட்சங்கள் மோசடி செய்துவிட்டார் என்றும் சனாகான் போலீசில் புகார் அளித்தார். புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி பூனம் கண்ணாவை கடந்த மாதம் கைது செய்தனர்.
இந்த நிலையில் சனாகான் மீது பூனம் கண்ணா, இன்னொரு புதிய புகாரை போலீசில் அளித்துள்ளார். அதில் தன்னிடம் சனாகான் பணமோசடி செய்துவிட்டதாகவும், அடியாட்கள் வைத்து மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மீது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதன் மூலம் சனாகான் மீண்டும் கைதாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், அவர் முன்ஜாமீன் பெற முயற்சி செய்து வருகிறார்.