Don't Miss!
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நடிகை சரண்யா மோகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது
திருவனந்தபுரம்: நடிகை சரண்யா மோகனுக்கு கேரளாவில் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்த கேரளாவை சேர்ந்த நடிகை சரண்யா மோகன். இவர் நடிப்பு, நடனம், பாடகி என பன்முகத் தன்மை கொண்டவர்.
இவர் தமிழில் குழந்தை நட்சத்திரமாக காதலுக்கு மரியாதை படத்தில் அறிமுகமானார். பிறகு இவர் நடித்து வெளிவந்த யாரடி நீ மோகினி, அழகர்சாமி, வேலாயுதம், வெண்ணிலா கபடி குழு ஆகிய படங்கள் நடித்து புகழ் பெற்றார்.
இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பரில் சரண்யா மோகன்அரவிந்த் கிருஷ்ணன் திருமணம் ஆலப்புழாவில் நடந்தது. இனிமேல் நான் நடிக்கமாட்டேன். நடனப்பள்ளி தொடங்கி நடத்துவேன் என்று அவர் கூறினார். அதன்படி நடிக்கவில்லை. இந்நிலையில் கேரளாவில் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.