Don't Miss!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Lifestyle தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
உண்மையில் ஷகீலா பெண் தாதா!
சென்னை: உண்மை படத்தில் கவர்ச்சி நடிகை ஷகீலா பெண்தாதாவாக நடித்துள்ளாராம்.
சவாடியா என்னும் இந்திப்படம் உள்ளிட்ட 3 படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியவர் பி.ரவிக்குமார். சென்னையில் பிறந்த இவர் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் மும்பைக்கு சென்று இந்திப்படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
தற்போது இவர் இயக்கும் புதிய படம் ‘உண்மை'. தான் இயக்கும் முதல் படம், தமிழ் படமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மதர் கிரின்லேண்ட் மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி ‘உண்மை' என்ற படத்தை இயக்கி வருகிறார்.இதில் இவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சுஜிபாலா நடித்துள்ளார்.
சுஜிபாலாவுக்கு பதில் ஷர்மிளா, ஷகிலா, ஷர்மிலி
இந்த படத்தில் நடித்த போது, எனக்குக் கொலை மிரட்டல் விட்டார்.." என்று ஹீரோயின் சுஜிபாலாவும், "அவர் சொல்வதெல்லாம் பொய். அவர்தான் என்னுடைய சொத்துக்களையெல்லாம் சுரண்டிவிட்டார்..." என்று ஹீரோ கம் தயாரிப்பாளர் கம் இயக்குநரான ரவிக்குமாரும் மாறி மாறி புகார் சொல்லிக்கொண்டனர்.
சுஜிபாலா வரவில்லை
ஒருவழியாக உண்மை படத்தின் குழுவினரின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று இரவு ரெசிடென்ஸி டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஹீரோயின் சுஜிபாலா வரவில்லை. ஹீரோயின் சுஜிபாலாவுக்கு பதிலாக படத்தில் நடித்த ஷர்மிளா, ஷகிலா, ஷர்மிலி மூவரும் வந்திருந்தனர். இவர்களுடன் ராதாரவி, கோட்டா சீனிவாசராவ், சிங்கம் புலி, வாசு விக்ரம், மீனாட்சி தேசாய், பாண்டு, வையாபுரி, சிந்து, அன்வர் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அரசியல் கதை
இந்த நாட்டில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு முன்னால் வாக்குறுதிகளை அள்ளிக் கொடுக்கின்றனர். பின்னர் ஆடம்பர வாழ்க்கைக்காக கொடுத்த வாக்குறுதிகளை மறந்து விட்டு செய்யும் ஊழலை வெளிப்படுத்துவதுதான் படத்தின் கதையாம். இதுவரை கவர்ச்சி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஷகிலா, இப்படத்தில் வில்லியாக நடித்துள்ளார்.
லேடி டான்
ஷகிலா பேசும்போது "நான் எப்போதும் கவர்ச்சியாத்தான் நடிச்சிருக்கேன். அப்படிப்பட்ட கேரக்டர்கள்தான் எனக்கு வரும். ஆனா இந்த படத்துல ஒரு டான் கேரக்டர்ல நடிக்கணும்னு கூப்பிட்டாரு ரவி ஸார். நான் முதல்ல தயங்கினேன். நான் எப்படி ஸார்..? எனக்கு சூட்டாகுமான்னு கேட்டேன். நிச்சயம் சூட்டாகும்.. நீங்கதான் பண்ணணும்னு கட்டாயப்படுத்தி நடிக்க வைச்சார் என்றார்.
வித்தியாசமான அனுபவம்
இயக்குநர் நடிச்சதை பார்த்து அப்படியே நடிப்பேன். இதுவரைக்கும் என் லைப்ல இப்படியொரு கேரக்டர் செஞ்சதில்லை.. உங்களுக்கும் இதுவொரு வித்தியாசமான அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்.." என்றார்.
அம்மா கதாபாத்திரம்
நடிகை ஷர்மிளா பேசும்போது, "கல்யாணமாகி பையன் பிறந்த பின்னாடி இப்பத்தான் முதல் முறையா நான் அவுட்டோர் ஷூட்டிங்கிற்காக இந்தப் படத்துக்காகத்தான் போனேன்.. படத்துல சின்ன வயசு ரவிக்குமாருக்கு அம்மாவா நான் நடிச்சிருக்கேன்.. நல்ல கேரக்டர்.." என்றார்.
ஊழல் அரசியல்வாதிகள்
படத்தின் ஹீரோ ரவிக்குமார் பேசும்போது, "உண்மையை ஊரறியச் சொல்லணும்ன்றதுதான் இந்தப் படத்தோட கரு. நாட்டுல இப்போ நடந்துக்கிட்டிருக்கிற பல ஊழல்களை செய்யும் அரசியல்வாதிகளால மக்கள் ரொம்ப வெறுப்புல இருக்காங்க. அது மாதிரியான சில சம்பவங்கள் இந்தப் படத்துல வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கேன்.." என்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஊட்டி, கொடைக்கானல், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று, இறுதிக் கட்டமாக குலுமனாலியில் நடந்து முடிந்துள்ளதாம்