Don't Miss!
- News ஆனானப்பட்ட துபாயில்.. அவ்வளவு காசு இருந்தும்.. ஊருக்குள் தண்ணீர் தேங்குவது ஏன்? இதுதான் காரணம்
- Sports KKR vs RR : தோனியை அப்படியே பின்பற்றினேன்.. என் ஆட்டத்திற்கு காரணம் அவர் தான்.. பட்லர் நெகிழ்ச்சி!
- Technology அம்பானி அலப்பறை.. 2025 மார்ச் வரை ரீசார்ஜ் பண்ணவே வேணாம்.. 11 மாசத்துக்கு டெய்லி 1.5GB டேட்டா.. என்ன திட்டம்?
- Automobiles கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!
- Lifestyle Today Rasi Palan 17 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய நிதி பரிவர்த்தனைகளைத் தவிர்ப்பது நல்லது...
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
ஷகீலாவுக்கு தண்டனை கிடைக்குமா?...ஆபாசப் பட வழக்கில் விரைவில் 'ஜட்ஜ்மென்ட்'!
பாளையங்கோட்டையில் உள்ள சினிமா தியேட்டரில் கடந்த 26-8-2003ம் ஆண்டு நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் நடித்த இளமை கொண்டாட்டம் என்ற படம் ஓடியது. இதில் ஆபாச காட்சிகள் காட்டப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பாளை போலீசார் தியேட்டருக்கு சென்று ஆபாச காட்சிகள் ஒளிப்பரப்புவதை கண்டுபிடித்து படச்சுருளை கைப்பற்றினார்கள்.
இது தொடர்பாக தியேட்டர் மேலாளர் பாஸ்கரன், ஆபரேட்டர் பரமசிவன், ஊழியர்கள் வசிகரன், சிவசுப்பிரமணியன் உள்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். மேலும் படத்தில் ஆபாசமாக நடித்த நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செயயப்பட்டது. இவ்வழக்கு விசாரணை நெல்லை குற்றவியல் முதலாவது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ஷகிலா, நடிகர் தினேஷ் மற்றும் தியேட்டர் ஊழியர்கள் உள்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜாராகினர். நீதிபதி (பொறுப்பு) ராபின்சன் ஜார்ஜ் வழக்கை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்துள்ள நிலையில் விரைவில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபாசப் படத்தில் நடித்ததாக நிரூபணமானால் ஷகீலாவுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.