ஷெரினுக்கு எடுப்பான.. சிவப்பு நிற சேலை.. இதயத்தை அள்ளி தந்த ரசிகர்கள்!
சென்னை : நடிகை ஷெரின் சிவப்பு சேலையில் அசத்தலான போட்டோசூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video
கோயம்புத்தூரில் இருக்கும் ஷெரின் தனது சொந்த ஊரான பெங்களூர் போக முடியாமல் ஊரடங்கினால் நீண்ட நாட்களாக கோயம்புத்தூரிலேயே இருந்து வருகிறார். தினமும் சில புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார் .

இதே போல் தற்போது சிவப்பு சேலையில் தனது வீட்டில் இருந்த படியே மிகவும் அசத்தலான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார் ஷெரின். இந்த புகைப்படங்கள் அனைத்திலும் தனது சிறிய வெட்கம் கொண்ட சிரிப்பின் மூலம் ரசிகர்களின் இதயத்தை கொள்ளையடித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் அனைத்திலும் ஷெரின் சிரிக்கும் போது அவர் கண்ணத்தில் விழும் குழி மிகவும் அழகாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் இந்த சிவப்பு சேலை உங்களுக்கு மிகவும் எடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் பலர் ஷெரினின் கமெண்டுகளில் கூறியுள்ளனர்

ஷெரின் முழுவதுமாக நேரம் அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் தான் நேரத்தை செலவிட்டு வருகிறார். இதை தவிர்த்து வீட்டில் இருக்கும் நேரத்தில் படங்களும் பார்த்து வருகிறார். சமீபத்தில் இவர் பதிவேற்றிய ஒரு புகைப்படத்தில் சமைத்து கொண்டே இணையத்தில் அமேஷான் பிரைமில் தாராள பிரபு படத்தை பார்க்க போவதாக பதிவேற்றியிருந்தார். இவர் மட்டுமில்லை பல முக்கிய பிரபலங்களும் இணையத்தில் தாராள பிரபு படத்தை பார்த்து வருவதை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
ஷெரினிக்கும் ஹரீஸ் கல்யாணுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை இருவரும் பிக்பாஸ் மூலம் பெரிய புகழை பெற்றவர்கள். முக்கியமாக ஹரீஸ் கல்யாணுக்கு பிக்பாஸ் தான் சினிமாவுக்கான இரண்டாவது வாய்ப்பை வழங்கியது என்றே கூறலாம்.

தற்போது சிவப்பு சேலையில் புகைப்படங்கள் எடுத்து அசத்தியதை போல தினமும் வித்தியாசமான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை உற்சாகபடுத்தி வருகிறார் ஷெரின் அதனுடன் பல கருத்துகளையும் கூறி வருகிறார். தற்போது பதிவேற்றிய புகைப்படத்தில் கூட வேட்கைக்கு விலையில்லை என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











