Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இப்போதைக்கு கல்யாண ஐடியாவே இல்லை...- 'கோடை மழை' ஸ்ரீ ஜா!
கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும் கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்துப் பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.
ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு திருமண ஏற்பாடு என்பது மலைப்பை தரும் விஷயமாகத்தான் இருக்கிறது.. மண்டபத்தில் ஆரம்பித்து, சாப்பாடு, மணவறை அமைப்பு, மேக்கப் என தனித்தனியாக ஆட்களை தேடுவதும் தேடிக்கண்டுபிடிப்பதும் அவர்களை ஒருங்கிணைப்பதும் சிரமமான ஒன்று.. இதனை கருத்திற்கொண்டுதான் ஆங்காங்கே 'வெட்டிங் பிளானர்கள்' எனப்படும் திருமண ஏற்பாட்டாளர்கள் உருவாக ஆரம்பித்தார்கள்..
முழு திருமணத்தையும் அவர்களே பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, திருமண வீட்டாரின் சுமைகளை குறைத்தார்கள் என்றாலும், ஒரு திருமண நிகழ்விற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் அவர்களாகவே கவனித்துக்கொள்வதில் சில சங்கடங்களும் ஏற்பட்டன. அவர்கள் சொன்ன நபர்களைத்தான் ஒப்பந்தம் செய்தார்கள்.. அவர்கள் சொன்னதுதான் செலவு என்கிற நிர்ப்பந்தமும் இருக்கிறது..
இதுபோன்ற மனக்குறைகள் எதுவும் வராமல், அதேசமயம் திருமண வீட்டார் தங்களுக்கு தேவையான ஒவ்வொன்றுக்கும் நேரில் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே பெறுவதற்கான வசதி இருந்தால், அதுவும் ஒரு மொபைல் போனுக்குள்ளேயே அடங்கிவிட்டால் எப்படி இருக்கும்..?
அப்படி ஒரு சிறப்பு வசதியை ஏற்படுத்தி மை கிராண்ட் வெட்டிங் நிறுவனத்தை நடத்திவரும் ஆர்.சரத் என்பவர். திருமண வீட்டாரின் விருப்பப்படி அனைத்தையும் அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் 'மை கிராண்ட் வெட்டிங்' என்கிற செயலியை (App) உருவாக்கியுள்ளார்.. 'கங்காரு', 'வந்தா மல', கோடை மழை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, இந்த செயலியை அறிமுகப்படுத்தினார்.
இந்த செயலியை அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ரீஜாவிடம் அவரது திருமணம் எப்போது என கேட்டதற்கு, "இன்னும் திரையுலகில் நான் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது.. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை.. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் இந்த மை கிராண்ட் வெட்டிங் எனக்கு ரொம்பவே கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன்," என்றார்..