Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தளதளவென வளர்ந்திருக்கும் ஸ்ரேயா ஷர்மா… வாடி ராசாத்தி என வர்ணிக்கும் ரசிகர்கள்!
மும்பை : சூர்யாவுக்கு குழந்தையாக சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்த ஸ்ரேயா ஷர்மா தளதளவென வளர்ந்திருக்கும் லேட்டஸ்ட் லுக் பிக்ஸ் வைரலாகி வருகிறது.
ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்த இவர் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஹீரோயினாக தமிழிலும் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக நடித்தபோதே இவருக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருந்த நிலையில் தேனீக்கள் போல இவரை சமூக வலைதளங்களில் சுற்றி வரும் ரசிகர்கள் இப்பொழுது ஸ்ரேயா ஷர்மா பகிர்ந்த அட்டகாசமான புகைப்படங்களை வர்ணித்து லைக்க்குகளை குவித்து வருகின்றனர்.
குழந்தை நட்சத்திரங்களும்
சினிமாவில் அறிமுகமாகும் அனைத்து குழந்தை நட்சத்திரங்களும் பிரபலமடைவதில்லை, ஒரு சில குழந்தைகள் மட்டுமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மனதில் நீங்கா இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் சூர்யா நடித்த சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஒரு துறு துறுப்பான குழந்தை நட்சத்திரமாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் நடிகை ஸ்ரேயா ஷர்மா.
எக்கசக்கமான திரைப்படம்
தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ஹீரோ ஹீரோயின்களுக்கு இணையாக ஆக்ட்டிங்கில் பட்டையை கிளப்பிய இவருக்கு பல்வேறு பாராட்டுக்களும் கிடைத்த நிலையில் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் எக்கசக்கமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அசத்தியுள்ளார்.
படிப்பில் கவனம்
நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாகவும் நடித்துள்ள ஸ்ரேயா ஷர்மாவுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் பின் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இப்பொழுது படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
ஹீரோயினாக
திரைப்படங்களில் நடிக்காத போதிலும் ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வந்த ஸ்ரேயா ஷர்மாவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் பெருகி வரும் நிலையில் இப்பொழுது ஹீரோயின் ரேஞ்சுக்கு தள தளவென வளர்ந்து ஆப்பிள் பழம் போல இருக்கும் ஸ்ரேயா ஷர்மா சிங்கிள் பீஸ் உடையில் வீட்டில் அனைவரையும் கொள்ளைக் கொள்ளும் அளவிற்கு எடுத்த புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதைத் தொடர்ந்து அவரது ரசிகர்கள் "வாடி ராசாத்தி" என வர்ணித்து புகழ்ந்து பாடி விரைவில் ஹீரோயினாக காண காத்துக்கொண்டிருக்கிறனர்.