Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சினிமாவில் நான் சந்தித்த எல்லோருமே நல்லவர்கள்: ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்
சென்னை: சினிமாவில் தான் சந்தித்த அனைவருமே நல்லவர்கள் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும், அதைத்தாண்டி நடிப்பு, நடனம், இசை என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவுக்கு வந்த திறமைசாலி.
இவர் இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் அனைத்தையும் அவரே விருப்பப்பட்டு தேர்வு செய்ததாகவும், அதுபோலவே எதிர்காலத்திலும் பிடித்த கதையை தேர்வு செய்து நடிப்பேன் எனவும் கூறினார்.
மதநம்பிக்கை குறித்து அவருக்கும் கமல்ஹாசனுக்கும் வேறுபாடு உள்ளது எனக் கூறிய ஸ்ருதிஹாசன், ஆன்மிக சக்தி என்று ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இருக்கிறதா எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக திரையுலகில் அவர் சந்தித்த அனைவருமே நல்லவர்கள் எனவும், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.சினிமாவில் பெண்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என ஸ்ரீரெட்டி புகாரளித்து வரும் நிலையில் ஸ்ருதிஹாசன் இவ்வாறு கூறியுள்ளார்.