Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவில் நான் சந்தித்த எல்லோருமே நல்லவர்கள்: ஸ்ருதிஹாசன்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்
சென்னை: சினிமாவில் தான் சந்தித்த அனைவருமே நல்லவர்கள் என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை ஸ்ருதி ஹாசன் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும், அதைத்தாண்டி நடிப்பு, நடனம், இசை என எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு சினிமாவுக்கு வந்த திறமைசாலி.
இவர் இப்போது மகேஷ் மஞ்ச்ரேக்கரின் இந்தி படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நியூயார்க்கில் நடைபெற்ற இந்திய சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கமல்ஹாசனுடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்த ஸ்ருதிஹாசன், சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் அனைத்தையும் அவரே விருப்பப்பட்டு தேர்வு செய்ததாகவும், அதுபோலவே எதிர்காலத்திலும் பிடித்த கதையை தேர்வு செய்து நடிப்பேன் எனவும் கூறினார்.
மதநம்பிக்கை குறித்து அவருக்கும் கமல்ஹாசனுக்கும் வேறுபாடு உள்ளது எனக் கூறிய ஸ்ருதிஹாசன், ஆன்மிக சக்தி என்று ஒன்று இருப்பதாக நம்புகிறேன். ஆனால் அது கோவில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் இருக்கிறதா எனக் கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த பத்து ஆண்டுகளாக திரையுலகில் அவர் சந்தித்த அனைவருமே நல்லவர்கள் எனவும், சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதாகக் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.சினிமாவில் பெண்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள் என ஸ்ரீரெட்டி புகாரளித்து வரும் நிலையில் ஸ்ருதிஹாசன் இவ்வாறு கூறியுள்ளார்.