Don't Miss!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வாடகைக் கட்டட பிரச்சனை: கமிஷனரிடம் சோனா புகார்
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு, நடிகை சோனா நேற்று வந்தார். போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு ஒன்றை அவர் கொடுத்தார்.
பின்னர் நிருபர்களிடம், அவர் கூறுகையில், "நான், 'எத்ரியல் இண்டீரியர்ஸ்' என்ற மரச்சாமான்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறேன். இது போரூர் ஆலப்பாக்கம் கணேஷ் நகரில் உள்ளது. இந்த தொழிற்சாலை நடக்கும் இடத்தின் உரிமையாளர்கள் ராமலிங்கம், உஷா, ராணி, சாந்தி ஆகியோராகும்.
இவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, தொழிற்சாலையை நடத்தி வந்தேன். போரூரில் இருந்து படப்பைக்கு எனது தொழிற்சாலையை மாற்றுவதற்கு விரும்பியதால், மே மாதம் இடத்தை காலி செய்யப்போகிறேன் என்று கடந்த மார்ச் மாதம் ராமலிங்கத்துக்கு நோட்டீஸ் கொடுத்தேன்.
எனவே அட்வான்சாக கொடுத்த பணம் ரூ.7 லட்சத்தில், 3 மாத வாடகையை பிடித்தம் செய்துவிட்டு மீதியை தர வேண்டுமென்று கேட்டேன். ஆனால் பெயிண்டிங், பாத்ரூம் சுத்தம் செய்யும் பணி போன்றவற்றுக்காக பணம் சரியாக போய்விட்டது என்று பணத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.
இதனால் நாங்கள் அந்த கட்டிடத்துக்கு வேறு பூட்டுபோட்டோம். ஆனால் அதை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர். அங்கு எங்களுக்குச் சொந்தமான ரூ.6 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளன.
இதுபற்றி மதுரவாயல் போலீசிடம் புகார் கொடுத்தேன். சிவில் வழக்கு என்பதால் வழக்குப்பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர். எனவே இதுகுறித்து போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தேன். இந்த வழக்குக்கான அதிகார வரம்பு, புறநகர் போலீஸ் கமிஷனர் வசத்தில் வருவதால் அங்கு சென்று புகார் கொடுக்கும்படி கமிஷனர் அறிவுறுத்தினார்," என்றார்.