Don't Miss!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மழையால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவிட 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' தொடங்கிய சோனா
சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ 'ரைஸ் பவுல் சேலஞ்ச்' என்ற புதிய அமைப்பை அதன் மூலமாக உதவி செய்ய முன்வந்திருக்கிறார் நடிகை சோனா.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் பகுதிகள் அதிகமாகப் பாதிப்படைந்து இருக்கின்றன.
இந்நிலையில் நடிகை சோனா மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.
தமிழகத்தைப் பாதித்த மழை
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான கனமழை பெய்து வருகிறது. திடீரென்று பெய்த அதிக மழையால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் பகுதிகளில் அதிக சேதத்தை மழை ஏற்படுத்தி இருக்கிறது.
களத்தில் குதித்த பிரபலங்கள்
மத்திய, மாநில அரசுகளின் உதவியோடு தமிழ்நாட்டில் உள்ள பிரபலமானவர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மேலும் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் மற்றும் தனுஷ் ஆகியோர் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பணத்தை வழங்கி இருக்கின்றனர்.
|
சோனா
நடிகர்களைத் தொடர்ந்து நடிகை சோனாவும் தற்போது வெள்ள நிவாரண நிதிக்கு உதவிகள் செய்ய முன்வந்திருக்கிறார். இவர் கடந்த வாரம் சமூக வலைதளங்கள் மூலமாக மக்களுக்கு உதவிகள் புரியுமாறு கோரிக்கைகள் விடுத்தார். இதற்காக அவர் ரைஸ் பவுல் சேலஞ்ச் என்ற ஒரு அமைப்பையும் தொடங்கினார்.
விஷால் மூலமாக
இவரின் கோரிக்கைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதுவரை சுமார் 1500 கிலோ அரிசி, பிஸ்கட், டூத் பிரஷ்கள் போன்றவை இந்த ரைஸ் பவுல் சேலஞ்ச் மூலமாக பெறப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை நடிகர் விஷாலின் ரசிகர் மன்றங்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர சோனா வழிவகை செய்திருக்கிறார்.
சோனாவின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.