Don't Miss!
- News பிறந்தது சென்னை தான்.. ஆனா கன்னடா தெரியுமா? பிரசாரத்தில் தமிழர்களிடம் சிவராஜ் குமார் திடீர் கேள்வி
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நாய்களைக் கொல்லாதீங்க, நிறுத்துங்க.. கேரள முதல்வருக்கு சோனாக்ஷி கோரிக்கை
மும்பை: கேரளாவில் தெரு நாய்கள் கொலை செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகை சோனாக்க்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளாவில் தெருக்களில் உள்ள நாய்கள் மனிதர்களுக்கு இடையூறாக இருக்கின்றன என அவைகளை கொடூரமாக கொலை செய்து வருகிறார்கள். இதனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள், சமூக வலைகளில் எதிர்ப்புகள் நடந்து வருகின்றன.
கேரளாவில் தெருவில் உள்ள நாய்களை கொலை செய்வதை தடை செய்ய வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விஷால் உண்ணாவிரதம் இருந்து தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
விஷாலைத் தொடர்ந்து பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் கேரள முதலைமச்சர் உம்மன் சாண்டிக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.
I request the CM of Kerala @Oommen_Chandy to stop culling stray dogs in Kerala..u should too! Go on...tell him to stop this inhuman act!
— Sonakshi Sinha (@sonakshisinha) September 4, 2015
அதில் கேரளாவில் தெரு நாய்களை கொலை செய்வதை தடுக்க வேண்டும் என கேரள முதலமைச்சரிடம் விண்ணப்பித்து இருக்கிறார் மேலும் 'இந்த மனிதநேயமற்ற செயலை தயவு செய்து நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்' எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும் சோனாக்க்ஷி சின்ஹாவின் இந்த கோரிக்கைக்கு ஆதரவு எழுந்திருக்கும் அதே நேரத்தில், பல பேர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.