Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
'பெத்த உசுரு ரத்த உசுரு'... அம்மாவை பிடிக்கும் எல்லோருக்கும் இந்த பாடல் பிடிக்கும்!
சென்னை: துலாம் படத்தின் இசை குறுந்தகட்டை வெளியிட்டு படக்குழுவினரை நடிகை சோனியா அகர்வால் பாராட்டினார்.
வி மூவி சார்பில் விஜய் விகாஸ் தயாரித்து இயக்கும் படம் 'துலாம்'. இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு அலெக்ஸ் பிரேம்நாத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் இசை குறுந்தகட்டை நடிகை சோனியா அகர்வால் வெளியிட்டார். பாடல்கள் அனைத்தையும் கேட்ட அவர், இசையமைப்பாளரை வாழ்த்தினார்.
அம்மாவை பற்றிய 'பெத்த உசுரு ரத்த உசுரு' பாடலை மிகவும் ரசித்த சோனியா, அன்னையை நேசிக்கும் அனைவருக்கும் இப்பாடல் பிடிக்கும் என பாராட்டினார்.
[ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி]
இப்படத்தைப் பற்றி இயக்குனர் விஜய் விகாஸ் கூறியதாவது,
" இந்தப் படத்தின் கதைக்கரு இன்றைய மாணவர்கள் போதை கலாச்சாரத்தால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்ற மையக்கருவை கொண்டது.அதே சமயம் இன்று சட்டம் என்பது எப்படி இருக்கிறது என்பதை பற்றியும் படம் பேசுகிறது.
சமூகத்தில் இன்று சாமானிய மக்கள், அப்பாவிகள் சட்டத்தினால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றியும், அந்தஸ்தில் உள்ளவர்கள் சமூகத்தில் பெரும் குற்றங்கள் செய்துவிட்டு எளிதாக அதிலிருந்து எப்படி தப்பித்து கொள்கிறார்கள் என்பதை எடுத்துரைக்கிறது.
இப்படத்தில் நாயகனாக விவாத் ,நாயகியாக ஜெயஸ்ரீயும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனோபாலா, சிவா பொன்னம்பலம்,மணிமாறன்,அஞ்சலி மற்றும் பலர் நடித்துள்ளனர்", என அவர் கூறினார்.