ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்ற பிரபல நடிகை.. கடவுள் என கோவில் சிற்பங்களுடன் ஒப்பீடு!
சென்னை: பிரபல நடிகை ஓம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்று தன்னை பெண் கடவுள் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகை சோபியா ஹயாத். லண்டனை சேர்ந்த இவர், ஹாலிவுட் நடிகையாகவும் வலம் வருகிறார்.
அதோடு மாடல், பாடகி, டிவி நடிகை என பல்வேறு முகங்களை கொண்டுள்ளார். ஏராளமான டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார் சோபியா.

சர்ச்சை
கடந்த 2013ஆம் ஆண்டு இந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 7ல் பங்கேற்றார். அஇதில் பங்கேற்ற சோபியா ஹயாத் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதனை தொடர்ந்து அவர் செய்யும் அனைத்து செயல்களும் சர்ச்சையில்தான் முடிகிறது.

தலைப்புச் செய்தி
முன்னாள் மாடல் அழகியான இவர், கடந்த 2016ஆம் ஆண்டு தன்னை கன்னியாஸ்திரியாக மாற்றிக் கொண்டார். இது பெரும் செய்தியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சைகளில் சிக்கி தலைப்புச் செய்தியாகிவிட்டார் சோபியா ஹயாத்.

ஓம் முன்பு நிர்வாணம்
அடிக்கடி தனது நிர்வாண போட்டோக்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி வரும் சோபியா, தன்னை பெண் கடவுள் என்றும் கூறிக் கொள்கிறார். அண்மையில் இந்துக்கள் புனிதமாக கூறி வழிபடும் ஓம் மந்திர படத்தின் முன்பு நிர்வாணமாக நின்று போஸ் கொடுத்தார்.

அரைகுறை உடையில்
மேலும் அந்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களிலும் ஷேர் செய்தார். அதோடு உள்ளாடைகளுடன் நிற்கும் போட்டோ, ருத்ராட்ச மாலையை அணிந்து கொண்டு அரைகுறை உடையில் கிளாமராக போஸ் கொடுப்பது என இருந்து வருகிறார்.

கடும் விமர்சனம்
இந்நிலையில் அவரது செயல்பாடுகள் இந்து மதத்தை சேர்ந்த மக்களின் கடவுள் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் உள்ளது என சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஓம் மந்திரத்தை அவமதிக்கும் வகையில் போட்டோ வெளியிட்ட அவரை கடுமையாக விமர்சித்தனர் நெட்டிசன்கள்.

கவனிக்க வேண்டும்
இதனை தொடர்ந்து நான் ஒரு இந்து, நான் ஒரு முஸ்லிம், புத்திஸ்ட் என பேசி வீடியோ வெளியிட்டு சோபியா, தான் எந்த மதத்திற்கும் எதிரானவள் இல்லை என்று கருத்து சொல்லியிருக்கிறார். மேலும் தன்னை ட்ரோல் செய்பவர்கள் இந்த வீடியோவை கவனிக்க வேண்டும்.

நிர்வாண சிற்பங்கள்
ஏனென்றால் நான் ஓம் வார்த்தைக்கு மிகவும் பக்தியுள்ளவள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்! ஓம் என்பது ஒரு சின்னம் அல்ல.. இது எல்லாவற்றிலும் இருக்கும் ஒரு வைப்ரேஷன் என கூறியுள்ளார். தன்னை நிர்வாண தெய்வம் என கூறிக் கொள்ளும் சோபியா, கோவில்களில் இருக்கும் நிர்வாண சிற்பங்களை மேற்கோள் காட்டியிருக்கிறார்.

நான் பெண் சக்தி
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள இந்தியாவில் உள்ள கோவில்கள் அனைத்தும் நிர்வாணமாகதான் உள்ளது. நான் செய்தது கோவிலில் இருந்து ஒரு படத்தை போட்டேன், அதனை ஒரு சிறுவன் ட்ரால் செய்தான். அவர்கள் என்னை அச்சுறுத்தினார்கள் ஏனென்றால் நான் பெண் சக்தியை பிரதிநிதிப்படுத்துவதால்.

வழக்குப் பதிவு
இந்தியாவில் உள்ள ஒரு கோவிலில் இருந்து மற்றொரு படம் இங்கே !!! தெய்வீக உடலுறவை அனுபவியுங்கள்! என குறிப்பிட்டு உடலுறவை வெளிப்படுத்தும் சிற்பங்களை ஷேர் செய்திருக்கிறார். தொடர்ந்து இந்து மத கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்படும் நடிகை சோபியா மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார்கள் குவிந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











