Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நடிகை ஸ்ரீபிரியா கணவர் ராஜ்குமார் மீது நில மோசடி புகார்
காஞ்சிபுரம் மாவட்டம், கோவளம் குன்றுக்காடு முத்து மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஏ. ரஞ்சன். இவர் காஞ்சீபுரம் போலீசில் ராஜ்குமார் மற்றும் 6 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
காஞ்சீபுரம் மாவட்டம் படூர் கிராமத்தில் உள்ள 61 சென்ட் நிலத்தை எனது தந்தை அர்ச்சுனனின் அண்ணன் பாளையம் வாங்கி இருந்தார். 1979-ம் ஆண்டு அந்த நிலத்தை பாளையம் எனது தந்தை அர்ச்சுனனுக்கு விற்றுவிட்டார்.
அந்த சொத்து தற்போது வரை அர்ச்சுனன் குடும்பத்தினரின் பராமரிப்பில் இருந்து வருகிறது. எனது தந்தையின் மறைவுக்கு பிறகு நானும் மற்ற அனுபவஸ்தார்களும் அந்த நிலத்தில் காம்பவுண்டு சுவர் எழுப்பினோம்.
இதற்கிடையே ராஜ்குமார் சேதுபதி (நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர்) என்பவர் இந்த சொத்துக்கு போலியாக பவர் ஆப் அட்டர்னி பெற்று 2004-ல் அதை ரூ.2 கோடிக்கு வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் நடிகை ஸ்ரீபிரியாவின் கணவர் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் மனுதாரர்.
மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த மே 13-ந்தேதி ராஜ்குமார் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு காஞ்சீபுரம் போலீசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் இதற்கும் காஞ்சிபுரம் போலீஸார் மசியவில்லை. வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இதையடுத்து மனுதாரர் ரஞ்சனின் வழக்றிஞர் போலீஸ் டிஜிபியை நேரில் சந்தித்து, காஞ்சிபுரம் குற்றப் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் கொடுத்தார். உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் போலீஸார் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது குறித்து டிஜிபியிடம் அவர் புகார் கூறினார்.
இதையடுத்து டிஜிபியின் அறிவுறுத்தலின் பேரில், தற்போது 6 பிரிவின் கீழ் ராஜ்குமார் சேதுபதி, அவரது கூட்டாளிகளான ஆர்.எல். டேவிட், என்.கே.வி. கிருஷ்ணா, ஆர். மீனாட்சி, ஆர். ஜாபர்கான், ரிது கோயல், ஈ.மீனாட்சி ஆகியோர் மீது காஞ்சீபுரம் போலீசார் அவசரம் அவசரமாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ராஜ்குமார், நடிகை லதாவின் தம்பி ஆவார். அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் அம்பிகாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வேறு சில படங்களிலும் தலை காட்டியுள்ளார்.