Don't Miss!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- News ஏப்ரல் 19ம் தேதி சம்பளத்துடன் பொது விடுமுறை: லோக்சபா தேர்தல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சென்னை வருகிறார் ஸ்ரீரெட்டி... ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர முடிவு!
தன்னை ஏமாற்றியவர்கள் மீது புகார் அளிக்க நடிகை ஸ்ரீரெட்டி சென்னை வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை : வாய்ப்புத் தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றியவர்கள் மீது புகார் அளிக்க சென்னை வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி.
நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திய தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அதன் தொடர்ச்சியாக தமிழ் திரைப்பட பிரபலங்கள் மீது தற்போது பாலியல் புகார் கூறி வருகிறார்.
நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ், சந்தீப், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சுந்தர்.சி ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய ஸ்ரீரெட்டி, விரைவில் சென்னை வர இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சென்னை வருகிறேன்:
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றைப் பதிவேற்றம் செய்துள்ளா ஸ்ரீரெட்டி. அதில் அவர், "நான் சென்னை வருகிறேன். என்னை ஏமாற்றியவர்கள் மீது போலீசில் புகார் தர இருக்கிறேன். தெலுங்கு திரைப்பட உலகில் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை.
கவலையில்லை:
ஆனால், தமிழ் சினிமாவில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். எனவே, தான் என்னை ஏமாற்றியவர்கள் மீது புகார் கொடுக்க சென்னை வருகிறேன். எதிர்காலத்தில் எனக்கு படவாய்ப்புகள் கிடைக்கிறதோ இல்லையோ. அதைப் பற்றி நான் கவலைப்படைவில்லை.
இது தான் காரணம்:
ஆனால், மற்ற பெண்களுக்கு என் வாழ்க்கைப் பாடமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதேபோல், இனி வரும் பெண்களில் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், ஏமாற்றுக்காரர்கள் தங்களது ஏமாற்றுவேலையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று தான் இவ்வாறு நான் செய்கிறேன்.
விஷால் மீது நம்பிக்கையில்லை:
எனவே, சென்னை மக்களும், தமிழ்த் திரையுலகினரும், எனது ஆதரவாளர்களும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன். ஆனால், நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் மீது எனக்கு நம்பிக்கையில்லை. பெண்களை அவர் தரக்குறைவாகப் பேசுகிறார். இது போன்ற உயர்பதவியில் இருக்கும் அவர், இவ்வாறு நடந்து கொள்வது சரியானதல்ல" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.