Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விபச்சாரின்னு சொல்றாங்க.. அது மட்டும் சரியா.. ஆவேசமான ஸ்ரீரெட்டி.. இறுதியில் சாந்தம்!
சென்னையில் தங்கி தமிழக மக்களுக்கு சேவையாற்ற போவதாக ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் தங்கி தமிழக மக்களுக்கு சேவையாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி நடிப்பில் ரெட்டி டைரி என்ற படம் தாயாராகி வருகிறது. அது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்ரீரெட்டி. அப்போது தெலுங்கு திரையுலகம் நான்கு பேரை சுற்றியே இருக்கிறது அதனால் மிக மோசமாக உள்ளது எனக் கூறினார்.
சினிமாவில் கருத்து சொல்லும் மிகப்பெரிய இயக்குனர்கள் நிஜவாழ்க்கையில் அப்படி இல்லை என்றுக் கூறி மிக மோசமான ஆங்கில வார்த்தையால் அவர்களை திட்டினார். பத்திரிகையாளர் சந்திப்பில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தியதற்கு செய்தியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
அதற்கு பதிலளித்த ஸ்ரீரெட்டி அவர்கள் என்னை விபச்சாரி என சொல்கிறார்கள் அது மட்டும் சரியா என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிறகு சமாதானமான ஸ்ரீரெட்டி, பொது இடத்தில் பேசிய தவறான வார்த்தைகளை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.
மேலும் தெலுங்கானாவிலும், ஆந்திராவிலும் தனக்கு மரியாதை இல்லை என்றும், அவர்கள் யாரும் தனக்கு உதவிக்கு முன்வரவில்லை எனவும் கூறினார். அதனால் இனிமேல் சென்னையிலேயே தங்கி மக்களுக்கு சேவையாற்ற போவதாக அவர் தெரிவித்தார்.