மணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: மாலத் தீவு கனவில் இருந்து இன்னும் மீண்டு வராத டாப்ஸியின் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன் பிறகு பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருந்த டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

காதலருடன் ஜாலி
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாப்ஸி தனது காதலர் மற்றும் சகோதரியுடன் மாலத்தீவு சென்று விடுமுறையை கொண்டாடினார்.

பெரும் வைரல்
அங்கு காதலருடன் ஆட்டம் போட்ட வீடியோக்கள் மற்றும் பிகினியில் சன்பாத் எடுத்த போட்டோக்களை எல்லாம் வெளியிட்டார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத் தீவில் இருந்து திரும்பினார் டாப்ஸி பன்னு. வந்த வேகத்தில் படப்பிடிப்புகளில் பிஸியான அவர் ஹசீன் தில்ரூபா படத்திற்காக தனது சுருள் முடியை ஸ்ட்ரெட்டனிங் செய்ததை குறிப்பிட்டு போட்டோக்களை ஷேர் செய்திருந்த்ர்.

த்ரோபேக் போட்டோ
இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது இதயத்தை மாலத்தீவிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார் என்பது அவருடைய சமீபத்திய பதிவு வெளிப்படுத்தியுள்ளது. தனது விடுமுறையிலிருந்து ஒரு த்ரோபேக்கை ஷேர் செய்துள்ளார் டாப்ஸி.

மணலில் படுத்து..
அந்த போட்டோவில் கோடுகள் போட்ட உடையை அணிந்துள்ள நடிகை டாப்ஸி கடற்கரை மணலில் படுத்திருக்கிறார். மேலு முகத்தை தொப்பியால் மூடி மறைத்துள்ளார். அவரது கேப்ஷன் புதன்கிழமை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த படத்துடன் அப்படியே ஒத்து போகிறது.

கனவு காண முடியுமா?
அதாவது "இன்னும் அங்கே இருக்க வேண்டும் என்று கனவு காண முடியுமா?" என கேட்டு பதிவிட்டுள்ளார். அவரது இந்த போட்டோவை தமன்னா உட்பட பல பிரபலங்கள் லைக் செய்துள்ளனர். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது டாப்ஸியின் போட்டோ.


Click it and Unblock the Notifications











