Don't Miss!
- News "முட்டாள்தனமா இருக்கே.." ரகுராம் ராஜன் சொன்ன பரபர கருத்து.. எல்லா பக்கமும் கிளம்பிய எதிர்ப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
மணலில் மட்ட மல்லாக்கப்படுத்து.. மாலத்தீவு கனவில் மயங்கி கிடக்கும் டாப்ஸி.. தெறிக்கவிடும் போட்டோஸ்!
சென்னை: மாலத் தீவு கனவில் இருந்து இன்னும் மீண்டு வராத டாப்ஸியின் போட்டோ வைரலாகி வருகிறது.
தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி பன்னு. தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதன் பிறகு பல பட வாய்ப்புகளை கையில் வைத்திருந்த டாப்ஸி, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
பிக்பாஸ்ல லவ் ட்ராக் இல்லாமலா.. அதுக்குதான் அவங்கள வச்சுருக்கீங்களா.. பல்ஸை பிடித்த நெட்டிசன்ஸ்!
காதலருடன் ஜாலி
தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் டாப்ஸி வெளிநாட்டு பேட்மிட்டன் வீரர் மதியாஸ் போ என்பவரை காதலிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் டாப்ஸி தனது காதலர் மற்றும் சகோதரியுடன் மாலத்தீவு சென்று விடுமுறையை கொண்டாடினார்.
பெரும் வைரல்
அங்கு காதலருடன் ஆட்டம் போட்ட வீடியோக்கள் மற்றும் பிகினியில் சன்பாத் எடுத்த போட்டோக்களை எல்லாம் வெளியிட்டார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.
ஹேர் ஸ்ட்ரெய்ட்டனிங்
கடந்த சில நாட்களுக்கு முன்பு மாலத் தீவில் இருந்து திரும்பினார் டாப்ஸி பன்னு. வந்த வேகத்தில் படப்பிடிப்புகளில் பிஸியான அவர் ஹசீன் தில்ரூபா படத்திற்காக தனது சுருள் முடியை ஸ்ட்ரெட்டனிங் செய்ததை குறிப்பிட்டு போட்டோக்களை ஷேர் செய்திருந்த்ர்.
த்ரோபேக் போட்டோ
இந்நிலையில் நடிகை டாப்ஸி தனது இதயத்தை மாலத்தீவிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார் என்பது அவருடைய சமீபத்திய பதிவு வெளிப்படுத்தியுள்ளது. தனது விடுமுறையிலிருந்து ஒரு த்ரோபேக்கை ஷேர் செய்துள்ளார் டாப்ஸி.
மணலில் படுத்து..
அந்த போட்டோவில் கோடுகள் போட்ட உடையை அணிந்துள்ள நடிகை டாப்ஸி கடற்கரை மணலில் படுத்திருக்கிறார். மேலு முகத்தை தொப்பியால் மூடி மறைத்துள்ளார். அவரது கேப்ஷன் புதன்கிழமை இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த படத்துடன் அப்படியே ஒத்து போகிறது.
கனவு காண முடியுமா?
அதாவது "இன்னும் அங்கே இருக்க வேண்டும் என்று கனவு காண முடியுமா?" என கேட்டு பதிவிட்டுள்ளார். அவரது இந்த போட்டோவை தமன்னா உட்பட பல பிரபலங்கள் லைக் செய்துள்ளனர். இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது டாப்ஸியின் போட்டோ.