Don't Miss!
- News பரங்கிமலை-வேளச்சேரி பறக்கும் ரயில் பாதை எப்போது முடியும்? சரியாக கணித்தால் லைஃப் டைம் செட்டில்மெண்ட்
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'விலகி நின்று ஒன்றிணைவோம்'.. தூர்தர்ஷனில் தமன்னா தமிழில் அட்வைஸ் !
சென்னை : தூர்தர்ஷன் சமூக வலைத்தள பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகை தமன்னா தமிழில் அறிவுரை கூறியுள்ளார்.
Recommended Video
கொரோனா தொற்றின் எண்ணிக்கை இந்திய அளவில் 3000 தாண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், இந்திய அரசு ஊடகமான பொதிகை தூர்தர்ஷன் பக்கத்தில் வெளியாகியுள்ள தமன்னாவின் காணொளியில், தமிழில் தனது அறிவுரைகளை கூறி இருக்கிறார் தமன்னா.
இதில் தமிழில் எல்லோருக்கும் வணக்கம் என்று கூறி பேச துவங்கிய தமன்னா. நம்மால் கொரோனாவை எளிதாக வீழ்த்த முடியும், அது என்னவென்று நமக்கு தெரியும் அது நாம் வீட்டிலே இருப்பது ஆகும் அது நமக்கு பாதுகாப்பு என்றும் கூறியுள்ளார். மேலும் சோப்பால் கைகளை கழுவி சுத்தமாக வைத்திருப்பது நல்லது என்றும் கூறியுள்ளார்.
இறுதியாக தமன்னா 'விலகிநின்று ஒன்றிணைவோம்' என்ற வாசகத்தையும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பலரும் முன் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகி வருகிறது இதுவரை பாதித்தோர் எண்ணிக்கை 411ஆக உள்ளது. இந்த நிலையில் அரசு ஊடகத்தின் வாயிலாக தமன்னா பேசியிருப்பது மக்களை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வீட்டில் 21 நாட்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதால் தமன்னா இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார். தினந்தோறும் ஒரு காணொளியை இணையத்தில் பகிரும் தமன்னா. ஒவ்வொரு காணொளியிலும் ஒவ்வொன்றை பற்றி தன் ரசிகர்களிடம் பகிர்ந்து வருகிறார். ஒவ்வொரு வீடியோ பதிவின் கீழேயும் குரோன்டைனின் இத்தனாவது நாள் இன்று நான் இதற்காக இதை செய்கிறேன் என்று ரசிகர்களுக்கு விளக்கமும் பக்காவாக கொடுத்து விடுகிறார் .
தமன்னா இவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தமன்னா பகிரும் பல விஷயங்கள் சுவாரஸ்யமாக இருப்பதால் ரசிகர்களும் தவறாமல் இவரின் காணொளிகளை பார்த்து பகிர்ந்து விடுகின்றனர். தமன்னாவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதால் இந்தியா முழுக்க இவரின் செயல் பேசபட்டு வருகிறது.
தமன்னா தமிழில் இறுதியாக விஷாலுடன் சுந்தர்.சி இயக்கத்தில் ஆக்ஷ்ன் படத்தில் நடித்திருந்தார். தற்போது ஹிந்தியில் 'போல் சௌவுத்தியான்' படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாஷ்வுதின் சித்திக்குடன் நடித்து வருகிறார். மேலும் தெலுங்கில் சீட்டிமார் மற்றும் தெட் இஸ் மகாலட்சுமி படங்களிலும் நடித்து வருகிறார்.