Don't Miss!
- News நேரடியாக களத்தில் இறங்கி வாதிட்ட கெஜ்ரிவால்.. கடும் எதிர்ப்பு தெரிவித்த ED.. கோர்ட்டில் நடந்த பரபர
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஸ்விம்மிங், யோகா, சைக்கிளிங்... மீ டூ தனுஶ்ரீ மீண்டும் ரெடி
மும்பை: இந்தி நடிகர் நானா படேகர் மீது, மீ டு புகார் கூறிய நடிகை தனுஶ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருகிறார்.
தமிழில், தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் இந்தி நடிகை தனுஶ்ரீ தத்தா. இவர், ஹார்ன் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, நடிகர் நானா படேகர் பாலியல் தொல்லை கொடுத்தார் என்றும் இதுகுறித்து வெளியே சொன்னதால் அவர் ஆதரவாளர்கள் மிரட்டினார்கள் என்றும் குடும்பத்தோடு சென்றபோது தாக்கப்பட்டேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த மீ டூ புகார், பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. நானா படேகர், தமிழில் பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம், ரஜினி நடித்த காலா படங்களில் நடித்தவர்.
இதையடுத்து இந்தி நடிகர், நடிகைகள் பலர் தனுஸ்ரீக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
பின்னர் நானா படேகர் மீது, மும்பை ஓஸிவாரா போலீஸ் நிலையத்தில் தனுஶ்ரீ புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நானா படேகருக்கு எதிராக தேவையான சாட்சியங்கள் இல்லாததால், விசாரணையை தொடரமுடியவில்லை என கூறி முடித்துவிட்டனர்.
இதை எதிர்த்து மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார் தனுஶ்ரீ தத்தா.
இந்நிலையில் மீண்டும் நடிப்பதற்கு அவருக்கு அழைப்புகள் வந்தன. இதனால் தினமும் ஸ்விம்மிங், சைக்கிளிங் செய்துவருகிறார். இதன் மூலம் உடல் எடையை குறைத்து ஃபிட் ஆகியுள்ளார். யோகா, தியானம், ஆன்மிக பயிற்சிகளுக்கும் சென்று வருகிறாராம்.
நண்பர்களுடன் முகத்தை மூடியபடி ஊர் சுற்றிய பிரபல நடிகை.. ஆனாலும் நம்ம மக்கள் கண்டுபிடிச்சுட்டாங்களே!
சினிமாவில் மீண்டும் நடிப்பதற்குத்தானா இது? என்று கேட்டால், இதையெல்லாம் செய்கிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. அதுபற்றி யூகித்துக்கொண்டே இருப்போம். உண்மையில் என்ன நடக்கும் என்று தெரியும்போது, அது ஆச்சரியத்தை அளிக்கட்டும் என்கிறார் தத்துவமாக.
ஆனால், பெரிய நிறுவனம் ஒன்று வெப் சீரிஸில் நடிக்கவும் சில படங்களில் நடிக்கவும் அவருக்கு அழைப்பு வந்துள்ளதாகவும் அதனால்தான் இதையெல்லாம் அவர் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.