Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
பொன்னியின் செல்வனில் த்ரிஷா கன்பர்ம், ஆனா அந்த நடிகர் இல்லை!
Recommended Video
சென்னை: மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா நடிப்பது உறுதியாகி இருக்கிறது.
கல்கியின் பிரமாண்ட வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஜெயமோகன் வசனம் எழுதுகிறார்.
இந்தப் படத்தின் ஷூட்டிங் தாய்லாந்து காடுகளில் நடக்கிறது. இதற்காக மணிரத்னம் தனது குழுவுடன் அங்கு சென்று லொகேஷன்களை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் தானும் இணைந்திருப்பதாக மலையாள நடிகர் லால் கூறியிருந்தார். 'என் கனவு நனவாகியிருக்கிறது. இந்தப் படத்துக்காக குதிரை சவாரி பயிற்சி பெறுகிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் த்ரிஷாவும் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியானது. இதைப் படக்குழு உறுதி செய்துள்ளது.
என் விவாகரத்துக்கு காரணமே அந்த விஷயம்தான்.. சுசி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்த பாடகி சுசித்ரா!
த்ரிஷா நடிப்பது உண்மைதான். அவர் என்னவாக நடிக்கிறார் என்பது சஸ்பென்ஸ். ஆனால், முக்கியமான கேரக்டர். மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் த்ரிஷா ஏற்கனவே நடித்திருந்தார். இப்போது அவர் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் என்று படக்குழுத் தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் அமிதாப்பச்சன் நடிப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், அவர் நடிக்கவில்லை. படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் முடிவு செய்யப்பட்டுவிட்டார்கள். விரைவில் அறிவிப்பு வரும். படப்பிடிப்பு ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என்கிறது பொன்னியின் செல்வன் டீம்.