Varalaxmi: வரலட்சுமி -நிக்கோலாயிற்கு தாய்லாந்தில் திருமணம்?.. தொடர்ந்து ரகசியம் காக்கும் சரத்குமார்!
சென்னை: நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் இணைந்து போடா போடி என்ற படத்தில் நடித்திருந்தார். நடிக்கும் ஆர்வம் இருந்த போதிலும் தன்னுடைய தந்தை சரத்குமார் அனுமதிக்காத காரணத்தால் தொடர்ந்து பல நல்ல வாய்ப்புகளை இவர் எழுதுவார்.
தொடர்ந்து வரலட்சுமியின் பிடிவாதத்தை தொடர்ந்து அவரை நடிக்க சரத்குமார் அனுமதித்திருந்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் வரலட்சுமி. பாலா இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாரை தப்பட்டை படம் இவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பை பெற்று தந்தது குறிப்பிடப்பட்டது. இந்நிலையில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை வரும் ஜூலை மாதம் 2ம் தேதி வரலட்சுமி திருமணம் செய்து கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை வரலட்சுமி சரத்குமார்: தமிழில் பல ஆண்டுகளைக் கடந்து ஹீரோவாக, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக, வில்லனாக நடித்து வருபவர் சரத்குமார். தற்போதும் இவர் மிகவும் பிஸியாகவே அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவரது மகள் வரலட்சுமி சரத்குமாரும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்புவுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார் வரலட்சுமி சரத்குமார். இவருக்கு நடிகையாகும் ஆசை முன்னதாகவே இருந்த நிலையில் சரத்குமார் இதற்கு முட்டுக்கட்டை போட்டதாக தெரிகிறது.
போடா போடியில் என்ட்ரி: தொடர்ந்து வரலட்சுமி ஆர்வத்தை புரிந்து கொண்ட சரத்குமார், ஒரு கட்டத்தில் ஓகே சொல்ல போடா போடி படம் மூலம் வரலட்சுமி நடிகையாக அறிமுகமானார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை வரலட்சுமிக்கு பெற்று தந்தது. இந்த வாய்ப்புகளை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் வரலட்சுமி. ஹீரோயினாக வரலட்சுமி நடித்ததை காட்டிலும் வில்லியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளார். இந்நிலையில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
வரலட்சுமி -நிக்கோலாய் திருமணம்: மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரை கடந்த 14 ஆண்டுகளாக வரலட்சுமி காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக திருமணமாகி பெண் குழந்தை இருக்கும் நிலையில் சச்தேவை இரண்டாவதாக வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்ய உள்ளார். இதையடுத்து அவர் பல விமர்சனங்களையும் பெற்றிருந்தார். அதற்கெல்லாம் தொடர்ந்து பதிலடி கொடுத்தும் வருகிறார் வரலட்சுமி. இன்னிலையில் வரும் ஜூலை மாதம் 2ம் தேதி தாய்லாந்தில் வரலட்சுமிக்கு திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் திருமணம்?: தாய்லாந்தில் வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவிற்கு திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில் தொடர்ந்து சென்னையில் ரிஷப்ஷன் நடத்தவும் சரத்குமார் திட்டமிட்டுள்ளார். இதையொட்டி நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, விக்னேஷ் சிவன், சித்தார்த் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் சரத்குமார், ராதிகா மற்றும் வரலட்சுமி சரத்குமார் என தொடர்ந்து அழைப்பிதழை கொடுத்து வருகின்றனர். திருமணம் வரும் ஜூலை 2ம் தேதி நடக்கவுள்ள நிலையில் முன்னதாக மெஹந்தி, ஹால்டி மற்றும் பல சம்பிரதாயங்களை சென்னையிலேயே நடத்தவும் சரத்குமார் திட்டமிட்டுள்ளார்.
திருமண அழைப்பிதழ்: தாய்லாந்தில் திருமணம் மட்டுமில்லாமல் ரிசப்ஷனும் நடக்க உள்ள நிலையில் தொடர்ந்து சென்னையிலும் ரிசப்ஷன் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுக்கு தொடர்ந்து அழைப்பிதழை இவர்கள் கொடுத்து வரும் சூழலில் அடுத்ததாக விஜய், கீர்த்தி சுரேஷ், ஸ்ருதிஹாசன், மாதவன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்கும் அடுத்தடுத்து அழைப்பிதழ் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார்.
ராயன் படத்தில் வரலட்சுமி: அடுத்ததாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்தில் முக்கியமான கேரக்டரில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இந்த படம் அடுத்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தில் வில்லத்தனமான கேரக்டரில் வரலட்சுமி நடித்துள்ளாரா என்பது குறித்து விரைவில் தெரியவரும். முன்னதாக வரலட்சுமி சரத்குமாரின் கேரக்டர் போஸ்டரை தனுஷ் வெளியிட்டு இருந்த நிலையில் அதில் மிரட்டலான லுக்கில் வரலட்சுமி காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











