நீச்சல் உடையில்.. கையில் சரக்குடன் பிரபல நடிகை.. எக்குதப்பா வர்ணிக்கும் ரசிகர்கள் !
மும்பை : கொரானாவின் தாக்கத்தால் நடிகைகள் பலரும் தங்களுக்குப் பிடித்த சுற்றுலா தளங்களில் தஞ்சமடைந்து பொழுதை கழித்து வந்த நிலையில் நடிகை வேதிகா இன்னும் லாக்டவுனில் இருந்து வெளியே வராமல் ஜாலியாக உள்ளார்.
காஞ்சனா 3 திரைப்படத்திற்குப் பிறகு இப்போது நடித்து வரும் வினோதன் படத்தின் மூலம் முதன்முறையாக பிரபுதேவாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
சிறந்த நடிகையான இவர் தமிழில் குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடிப்பதால் ரசிகர்கள் இவரை பல திரைப்படங்களில் பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது கையில் மதுவுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் ஹாயாக படுத்துக் கொண்டு இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு காட்சி விருந்து அளித்துள்ளார்.

முதன்முறையாக மதராஸி
பரதேசி, காவியத்தலைவன் என தரமான படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை வேதிகா தமிழில் முதன்முறையாக மதராஸி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.

பிம்பத்தை உடைத்து
பார்க்க மிகவும் க்யூட்டாக இருக்கும் நடிகை வேதிகா தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வர இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படம் தேசிய விருதுகளை பெற்று தந்ததோடு, வேதிகா க்யூட் நடிகை என்ற பிம்பத்தை உடைத்து சிறந்த நடிகை என்ற கௌரவத்தையும் பல விருதுகளையும் அள்ளித் தந்தது.

பல மடங்கு கூடியது
பரதேசி திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் வசந்தபாலன் உடன் இணைந்து " காவியத்தலைவன் " என்ற மற்றுமொரு காவிய திரைப்படத்தில் புதிய பரிமாணத்தில் நடித்து அசத்தியிருந்த வேதிகாவை ரசிகர்கள் மேலும் ரசிக்க இவரது ரசிகர்களின் எண்ணிக்கை பல மடங்கு கூடியது.

பிரபுதேவாவுடன்
இதன் பின் தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என நடித்து வந்த இவர் சமீபத்தில் ராகவா லாரன்ஸின் அதிரடி நடிப்பில் வெளியாகி வசூல் வேட்டை நடத்திய காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தோடு இப்பொழுது பிரபுதேவாவுடன் இணைந்து புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

கையில் மதுவுடன்
இவ்வாறு ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு தரமான திரைப்படங்களில் நடித்து கலக்கி வரும் நடிகை வேதிகா கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் செம ஜாலியாக அழகான சுற்றுலா தளத்தில் நீச்சல் குளத்தில் பளிங்கு போல பளபளவென இருக்கும் தனது தொடையை காட்டியவாறு பிகினி உடையில் செம்ம ஸ்டைலாக பில்லா போஸில் நின்று கொண்டு கையில் மதுவுடன் மொத்த அழகையும் காட்டியவாறு ட்ரோன் கேமரா மூலம் ரசித்து ரசித்து படம் பிடிக்கப்பட்ட இந்த தங்கச் சிலையின் அதீத பிகினி குளியல் வீடியோ இப்பொழுது வைரலாகி வருவதைத் தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் " தகதகவேன்று மின்னும் தங்கச்சிலையே " என வர்ணித்து வருகின்றனர். ஒரு சிலர் எக்குத்தப்பாக வர்ணித்து கமெண்டடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











