Don't Miss!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- News தாய் மடிக்கே திரும்பியதை போல ஃபீல் ஆகுது.. பாஜகவில் இணைந்த சுரங்க மன்னன் ஜனார்த்தன ரெட்டி நெகிழ்ச்சி
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்திரா காந்தி... சுப்பு லட்சுமி... வித்யா பாலனுக்கு குவியும் “பயோபிக்” வாய்ப்புகள்!
மும்பை: பாலிவுட்டில் நடிகையான வித்யா பாலனுக்கு பிரபலங்களின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகின்றனவாம்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்ததில் இருந்து வாழ்க்கை கதையை மையமாக வைத்து தயாராகும் படங்களுக்கு அழைப்பு வருகின்றன.
முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை படமாக எடுக்கின்றனர். அந்த படத்தில் இந்திரா வேடத்தில் நடிக்க அழைத்தனர்.
இன்னும் பலர்:
அதுபோல் கர்நாடக சங்கீத பாடகி எம்.எஸ்.சுப்பு லட்சுமி, பெனாசிர் பூட்டோ, நடிகை சுசித்ரா சென் ஆகியோர் வேடங்களிலும் நடிக்க அழைப்புகள் வருகின்றன.
கொஞ்சம் தயக்கம்:
கதைகளையும் என்னிடம் சொல்லி விட்டார்கள். ஆனால் எனக்கு தயக்கமாக இருக்கிறது. வாழ்ந்து மறைந்தவர்களின் வேடங்களில் நடிக்கும் ஆர்வம் குறைந்து விட்டது.
எல்லாமே நல்லதுதான்:
சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்கள்தான் ஓடும். ஆனால் இப்போது சிறுமுதலீட்டு படங்களும் ஓடுகின்றன.
கதைகளுக்கே முக்கியத்துவம்:
ரசிகர்கள் கதைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படங்களை தியேட்டருக்கு போய் பார்க்கிறார்கள். இனிமேல் நல்ல கதைகளுடன் வரும் படங்கள்தான் ஓடும். கோடிக்கணக்கில் செலவு செய்து கதை இல்லாவிட்டால் அந்த படங்கள் ஓடாது" என்று தெரிவித்துள்ளார்.