twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'ரிடையர்ட் நடிகைக்கே இவ்வளவு கோடியா?' நடிகை விஜயசாந்தியின் சம்பளத்தைக் கேட்டு ஷாக் ஆகும் திரையுலகம்!

    By
    |

    சென்னை: முன்னாள் ஹீரோயின் நடிகை விஜயசாந்தியின் சம்பளத்தைக் கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி.

    தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

    அம்மாவாக

    அம்மாவாக

    பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவை ஒதுக்கி வைத்தார். 13 வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர், மீண்டும் நடிக்க வந்தார். மகேஷ் பாபு நடித்துள்ள சரிலேரு நீக்கவேரு என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். அவர் மீண்டும் நடிக்க வந்தது அவரது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.

    நடிகை தமன்னா

    நடிகை தமன்னா

    அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். ஜனவரி 11 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி ஹிட்டானது. இதையடுத்து படத்தின் ஹீரோ மகேஷ்பாபு, அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.

    மகேஷ்பாபுவுக்கு நன்றி

    மகேஷ்பாபுவுக்கு நன்றி

    இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு விஜயசாந்தி நன்றி தெரிவித்திருந்தார். இதுபற்றி ட்விட்டரில், என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்துவந்த இயக்குனர் அனில், ஹீரோ மகேஷ்பாபுக்கு நன்றி. தமிழில் கல்லுக்குள் ஈரம் படத்தில் 1979 ஆம் ஆண்டு அறிமுகமானேன். தெலுங்கில் கில்லாடி கிருஷ்ணுடு மூலம் அறிமுகமானேன். இப்போது வரை எனது சினிமா வாழ்க்கையில் பங்களித்த அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்திருந்தார்.

    ரூ.4 கோடி சம்பளம்

    ரூ.4 கோடி சம்பளம்

    இந்நிலையில் மகேஷ்பாபு படத்தில் நடிக்க நடிகை விஜயசாந்திக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. '13 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருவதால் தனக்கு ரூ.5 கோடி சம்பளம் வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி கேட்டுள்ளார். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.

    Recommended Video

    Losliya Traditonal Photoshoot | Friendship | Aari Arjuna | Photoshoot
    மறுத்துவிட்டார்

    மறுத்துவிட்டார்

    இதனால் வேறு வழியில்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்காரா, நடிகை விஜயசாந்தியிடம் சம்பள விஷயம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால், அவர் சம்பளத்தைக் குறைக்க மறுத்துவிட்டாராம். இறுதியில் ரூ.4 கோடிக்கு சம்மதித்தார். அந்த தொகையை அவருக்கு கொடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கூறப்படுகிறது. ரிடையர்ட் நடிகைக்கே இவ்வளவு சம்பளமா? என திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    English summary
    Actress Vijayashanti has reportedly pocketed Rs.4 crore for her role in Mahesh babu's Sarileru Neekevvaru'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X