Don't Miss!
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- News அட****** லைவ்வில் வார்த்தையை விட்ட நிருபர்! சமாளித்த ஆங்கர்..! நிருபருக்காக மன்னிப்பு கேட்ட சேனல்..!
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Finance இந்தியாவுக்கு டேக்கா கொடுத்த எலான் மஸ்க்.. டெஸ்லா தொழிற்சாலை இப்போதைக்கு வராது..!!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
'ரிடையர்ட் நடிகைக்கே இவ்வளவு கோடியா?' நடிகை விஜயசாந்தியின் சம்பளத்தைக் கேட்டு ஷாக் ஆகும் திரையுலகம்!
சென்னை: முன்னாள் ஹீரோயின் நடிகை விஜயசாந்தியின் சம்பளத்தைக் கேட்டு திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழில், கல்லுக்குள் ஈரம், நெற்றிக்கண், தடயம், ராஜஸ்தான், வைஜெயந்தி ஐ.பி.எஸ். உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்தவர் விஜயசாந்தி.
தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் முன்னணி ஹீரோயினாக இருந்த இவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.
அம்மாவாக
பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர், சினிமாவை ஒதுக்கி வைத்தார். 13 வருடங்களாக நடிக்காமல் இருந்த அவர், மீண்டும் நடிக்க வந்தார். மகேஷ் பாபு நடித்துள்ள சரிலேரு நீக்கவேரு என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். அவர் மீண்டும் நடிக்க வந்தது அவரது ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது.
நடிகை தமன்னா
அனில் ரவிபுடி இயக்கிய இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். பிரகாஷ்ராஜ், ரோகிணி உட்பட பலர் நடித்துள்ளனர். நடிகை தமன்னா ஒரு பாடலுக்கு ஆடி இருந்தார். ஜனவரி 11 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகி ஹிட்டானது. இதையடுத்து படத்தின் ஹீரோ மகேஷ்பாபு, அமெரிக்காவுக்கு ஓய்வெடுக்கச் சென்றுள்ளார்.
மகேஷ்பாபுவுக்கு நன்றி
இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு விஜயசாந்தி நன்றி தெரிவித்திருந்தார். இதுபற்றி ட்விட்டரில், என்னை மீண்டும் சினிமாவுக்கு அழைத்துவந்த இயக்குனர் அனில், ஹீரோ மகேஷ்பாபுக்கு நன்றி. தமிழில் கல்லுக்குள் ஈரம் படத்தில் 1979 ஆம் ஆண்டு அறிமுகமானேன். தெலுங்கில் கில்லாடி கிருஷ்ணுடு மூலம் அறிமுகமானேன். இப்போது வரை எனது சினிமா வாழ்க்கையில் பங்களித்த அனைவருக்கும் நன்றி' என்று தெரிவித்திருந்தார்.
ரூ.4 கோடி சம்பளம்
இந்நிலையில் மகேஷ்பாபு படத்தில் நடிக்க நடிகை விஜயசாந்திக்கு ரூ.4 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. '13 வருடங்களுக்கு பிறகு நடிக்க வருவதால் தனக்கு ரூ.5 கோடி சம்பளம் வேண்டும் என்று நடிகை விஜயசாந்தி கேட்டுள்ளார். அவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனரும் ஹீரோவும் விரும்பினர்.
Recommended Video
மறுத்துவிட்டார்
இதனால் வேறு வழியில்லாமல் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்காரா, நடிகை விஜயசாந்தியிடம் சம்பள விஷயம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினாராம். ஆனால், அவர் சம்பளத்தைக் குறைக்க மறுத்துவிட்டாராம். இறுதியில் ரூ.4 கோடிக்கு சம்மதித்தார். அந்த தொகையை அவருக்கு கொடுத்ததாக தெலுங்கு சினிமாவில் கூறப்படுகிறது. ரிடையர்ட் நடிகைக்கே இவ்வளவு சம்பளமா? என திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.