twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமலா ராமனுடன் ஒரு பிரச்சினையும் இல்லை-பிரியா மணி

    By Sudha
    |

    Priyamani
    விமலா ராமனுக்கும், எனக்கும் இடையே மோதல் என்று வெளியான செய்தியில் உண்மை. அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார் நடிகை பிரியா மணி.

    புதுமுக இயக்குநர் விஜய் என்பவரின் இயக்கத்தில் விமலா ராமனும், பிரியா மணியும் இணைந்து புதிய தெலுங்குப் படத்தில் நடிக்கின்றனர். இதில் யாருக்கு முக்கியத்துவம் என்பது தொடர்பாக இரு நடிகைகளுக்கும் இடையே மோதல் மூண்டதாக தகவல்கள் வெளியாகின.

    முதலில் விமலா ராமன் இப்படத்தில் இருக்கிறார் என்பது பிரியா மணிக்குத் தெரியாதாம். அது தெரிய வந்தபோதுதான் பிரச்சினை வெடித்ததாம். விமலா ராமனுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது, எனது காட்சிகளை அதிகப்படுத்துங்கள் என்று பிரியா மணி வற்புறுத்தியதாகவும், அதற்கு விமலா ராமன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

    நான் ஒருதேசிய விருது பெற்ற நடிகை. என்னை விமலா ராமனுடன் சமமாக நடிக்க வைப்பதா என்று பிரியா மணி ஆவேசப்பட்டதாகவும், அதற்கு விமலா ராமன் பதிலளிக்கையில், மாபெரும் இயக்குநர் அமீர். எனவே பருத்தி வீரன் படத்தில் பிரியா மணி என்றில்லை, எந்த நடிகை நடித்திருந்தாலும் அவருக்கு விருது கிடைத்திருக்கும் என்று நக்கலடித்ததாகவும் கூறப்படுகிறது.

    ஆனால் அப்படி ஒரு சண்டையே நடக்கவில்லை என்று பிரியா மணி கூறியுள்ளார்.

    இதுகுறித்து பிரியா மணி கூறுகையில், உண்மையில் நான் இப்படத்தில் 2வதாகத்தான் ஒப்பந்தமானேன். எனவே விமலா ராமனுக்கு முக்கியத்துவம் தரக் கூடாது என்று நான் வற்புறுத்தியதாக கூறுவதில் லாஜிக்கே இல்லை. மேலும் அப்படி நான்கூறவும் இல்லை.

    இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டது, தகராறு ஏற்பட்டது என்று வெளியான செய்தியெல்லாம் வெறும் வதந்திதான், அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்றார் பிரியா மணி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X