இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு…யாஷிகாவை கொஞ்சும் பேன்ஸ்!
சென்னை : அடக்க ஒடுக்கமாக புடவையில் இருக்கும் யாஷிகாவை ரசிகர்கள் கொஞ்சி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.
தனது கவர்ச்சிகரமான நடிப்பால் இன்றைய இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ள யாஷிகாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
நடிகை யாஷிகா ஆனந்த் : பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த்.
நெருக்கமான போட்டோ : இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் யாஷிகா, அஜித் மனைவி ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகிய இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வந்த நிலையில் இருவரும் காதலிக்கின்றார்களா? திருமணம் செய்யப் போகிறார்களா? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.

வதந்திக்கு முற்றுப்புள்ளி : இதையடுத்து, யாஷிகாவின் அம்மா விளக்கம் அளித்திருந்தார். அதில்,போது 'இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர் என்றும் அவர்கள் இருவரும் காதலிப்பதாக வெளிவந்த செய்தி முழுக்க முழுக்க பொய்யானது என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இருவர் குறித்தும் பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ரொம்ப பிடிச்சிருக்கு :தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே அவர்களை கவர்வதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். தற்போது நடிகை யாஷிகா ஆனந்த், மகளிர் மலர் என்ற அட்டைப்படத்திற்கு சேலையில் போஸ் கொடுத்துள்ளார். மெரூன் நிற சேலையில் அழகாக இருக்கும் யாஷிகாவைப் பார்த்த பேன்ஸ், இந்த அடக்க ஒடுக்கம் எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பகிர்ந்த சில மணி நேரத்திலேயே பல லைக்குகளை குவித்து வருகிறது.


Click it and Unblock the Notifications











