Don't Miss!
- News அண்ணாமலையின் பாட்டி.. முளைத்த விவாதம்.. இதைவிடுங்க, பிரியங்கா, ராகுல் காந்தியை மீண்டும் சீண்டிய பாஜக
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
பூனையை திட்டுவதைவிட மீனை மூடி வைப்பதே மேல்.. நடிகையின் போட்டோவை பார்த்து நெட்டிசன்ஸ் அட்வைஸ்!
சென்னை: அரைகுறை உடையில் ஒய்யாரமாக படுத்திருந்த நடிகையை பார்த்து கிறங்கிய நெட்டிசன்கள், அவருக்கு அட்வைஸ் மழையை பொழிந்திருக்கின்றனர்.
Recommended Video
நடிகை யாஷிகா ஆனந்த் ஒரு சில படங்களில் நடித்திருந்த போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமே அதிகம் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான மகத்தை காதலித்தார்.
மகத்துக்கு ஏற்கனவே காதலி இருக்கிறார் என்று தெரிந்தும் கூட அவரை காததலிப்பதாக கூறினார் யாஷிகா ஆனந்த். இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார் யாஷிகா ஆனந்த்.
மம்மூட்டி, பார்வதி, அமலாபாலுக்கு அவார்ட்.. விஜய் சேதுபதிக்கு எந்த கேரக்டருக்கு விருதுன்னு பாருங்க !
உதட்டோடு உதடு
ஆனாலும் அவர் மிகவும் முதிர்ச்சியான அவரது நடவடிக்கை மிகவும் பாராட்டப்பட்டது. தொடர்ந்து தனது பிக்பாஸ் தோழியான ஐஸ்வர்யா தத்தாவுடன் லைவில் சோஷியல் மீடியாவில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது யாஷிகாவின் ஆண் நண்பர் ஒருவர் அவரை கட்டியணைத்து உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தார்.
கவர்ச்சி போட்டோ
அந்தக் காட்சியும் அப்படியே சமூக வலைதளத்தில் ஒளிபரப்பானதால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் வெளியிடும் போட்டோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
டபுள் மீனிங்
யாஷிகா ஆனந்த் வெளியிடும் போட்டோக்களில் கவர்ச்சி தூக்கலாக இருப்பதால் நெட்டிசன்கள் ஒரு பக்கம் ஜொள்ளு விட்டாலும் மறுபக்கம் மோசமாக விமர்சித்து வருகின்றனர். சிலர் டபுள் மீனிங் கமென்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் அதைப்பற்றியெல்லாம் யாஷிகா கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
சிவப்பு நிற உடை
முன்னழகையும் பின்னழகையும் மாறி மாறி காண்பித்து கிறங்கடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் தற்போது ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். அதில், சிவப்பு நிற லெஹாங்கா போன்ற உடையை அணிந்துள்ளார்.
செக்ஸி போஸ்
வெறும் பாவாடை ஜாக்கெட்டுடன் உள்ள அவர் முன்னழகையும் தொப்புளையும் காட்டி உசுப்பேற்றியுள்ளார். இந்த அரைகுறை உடையில் செக்ஸி போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஆனந்த் ஒய்யாரமாக சோஃபா மீது படுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் கவர்ச்சி என்றால் அது நீங்கள்தான் என வர்ணித்துள்ளனர்.
மீனை மூடி வைக்கலாம்
சில நெட்டிசன்கள், பூனையை திட்டுவதற்கு பதில் மீனை மூடி வைப்பதே மேல் என அவருக்கு அட்வைஸ் வழங்கியுள்ளனர். ரசிகர்களை திட்டுவதை விட இப்படி கவர்ச்சியை காட்டாமல் இருப்பதே மேல் என மறைமுகமாக கூறியிருக்கிறார் அந்த நெட்டிசன். இன்னும் சிலர் இதுதான் ஆடை சுதந்திரமா என கேட்டுள்ளனர்.
லைவ் சேட்
யாஷிகாவை ரெட் ரோஸ் என்று குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள், அவரை லைவ் சேட் செய்யும் படி கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிலர் உங்கள் தொப்புளில் போட்டு இருப்பது என்ன என்றும் கேட்டுள்ளனர். யாஷிகாவின் இந்த போட்டோ வைரலாகி வருகிறது.