Yashika Anand: ப்பா.. பார்த்துகிட்டே இருக்கலாம் போல.. யாஷிகாவின் அழகில் மயங்கிய பேன்ஸ்!
சென்னை: மாடலிங்கில் ஆர்வம் கொண்ட யாஷிகா ஆனந்த், இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். இரட்டை அர்த்த வசனம், விவகாரமான கதை அம்சம் கொண்ட இந்த படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிந்த முகமாக மாறிய யாஷிகா ஆனந்த்,தனது ரசிகர்களுக்காக விதவிதமான போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
டெல்லியிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த கவர்ச்சி புயல்தான் இந்த யாஷிகா ஆனந்த். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த இந்த அழகு புயல், நோட்டா, துருவங்கள் பதினாறு என சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குட்டி குட்டி டவுசரை அணிந்து கொண்டு வலம்வந்தார். என்னத்தான் இவர் ஓவர் கவர்ச்சி காட்டினாலும், ஓவியா போல இவரால் ரசிகர்களை கவரமுடியவில்லை. அதன்பின் பிக்பாஸ் தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். சில சீரியல்களிலும் தலைகாட்டிவிட்டு போனார்.

நடிகை யாஷிகா ஆனந்த்: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கார் விபத்தில் சிக்கி காலில் பலத்த அடி ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சை பெற்றார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி உயிரிழந்தார். விபத்து நடந்த போது யாஷிகா காரை ஓட்டியதால், கோட்டும் கேசுமாக அலைந்தார். அதன்பின் அதிலிருந்து மீண்டும் வழக்கம்போல் புகைப்படங்களை வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்கள் போடுவது, திரைப்படங்களில் நடிப்பது என பிஸியாகி விட்டார். இவர் லெஜண்ட் சரவணன் நடித்த லெஜண்ட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடினார்.
கிளுகிளுப்பு போட்டோ: இதெல்லாம் அவர் செய்தாலும் நெட்டிசன்கள் அவரிடம் எதிர்பார்ப்பது கிளுகிளுப்பு புகைப்படங்கள்தான். அந்த வகையில், தற்போது இவர் கோல்டன் நிற மெல்லிய உடையில் தனது முன்னழகும் பின்னழகும் அப்பட்டமாக தெரியும் படி இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
நான் தல ரசிகை: நடிகை யாஷிகா நடிப்பில் கடைசியாக ரிச்சர்ட் ரிஷியுடன் சேர்ந்து சில நொடிகளில் படம் வெளியானது. அந்த படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய யாஷிகா நான் தல அஜித் ரசிகை என்று, தல ரசிகர்களை வளைத்துப் போட்டு, இன்ஸ்டாகிராமில் இவரின் பாலோவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தார். தற்போது யாஷிகா நடிப்பில் இவன் தான் உத்தமன், ராஜ பீமா, பாம்பாட்டம், கந்தகம், சிறுத்தை சிவா ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
அட்ஜெஸ்ட்மெண்ட்: அண்மையில் நடிகை யாஷிகா ஆனந்த், ஒரு படத்திற்காக ஆடிஷன் சென்றேன், ஸ்கிரீன் டெஸ்ட் செய்துவிட்டு புகைப்படங்களை எடுத்தேன் அப்போது, அம்மாவை வெளியில் அனுப்பி விட்டு, அட்ஜெஸ்ட்மெண்டுக்கு ஒகே என்றால் படத்தில் நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்றார். அவர் அப்படி பேசியது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்ததால், நான் முடியாது என்று சொல்லிவிட்டு வெளியில் வந்துவிட்டேன். அவருக்கு என் அப்பா வயது இருக்கும், எனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக நான் அவரின் பெயரை வெளியிடவில்லை என்று கூறி பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











