Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் அகிலேஷ் யாதவ் போட்டி.. கனோஜ் தொகுதியில் நாளை மனுத்தாக்கல்.. பின்னணியில் 2 காரணம்!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என் நிர்வாண வீடியோவை பார்த்து சிரிப்பு சிரிப்பா வந்துச்சு: நடிகை ராதிகா ஆப்தே
மும்பை: தனது நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் கசிந்துள்ளதை நினைத்து சிரிப்பு தான் வருகிறதே தவிர அதை நினைத்து கவலைப்படவில்லை என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.
நடிகை ராதிகா ஆப்தேவின் நிர்வாண செல்ஃபி வாட்ஸ் ஆப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த செல்ஃபிக்களில் இருப்பது தான் இல்லை என ராதிகா விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தான் ராதிகாவின் நிர்வாண வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.
அந்த நிர்வாண காட்சி அவர் ஒரு குறும்படத்திற்காக நடித்துக் கொடுத்தது.
அனுராக் கஷ்யப்
பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் கஷ்யப் ராதிகா ஆப்தேவை வைத்து 20 நிமிடங்கள் ஓடும் குறும்படத்தை எடுத்துள்ளார். அந்த குறும்படத்தில் வரும் நிர்வாண காட்சி தான் கசிந்துவிட்டது.
என்ன இருக்கிறது அந்த வீடியோவில்
அந்த வீடியோவில் நடிகை ராதிகா ஆப்தே எதிரில் ஒருவர் அமர்ந்துள்ளார். எதிரே நிற்கும் ராதிகாவிடம் ஏதோ சொல்கிறார். உடனே அந்த ராதிகா ஆப்தே தனது நைட்டியை உயர்த்துகிறார்.. உள்ளாடை அணியாத நிலையில்... எல்லாம் தெரிகிறது.
கேவலமான சீன் எதற்கு
உடனே அவன் சிரிக்க, ராதிகா ஏதும் தெரியாதவர் மாதிரி முழிக்கிறார்.. அத்தோடு அந்த வீடியோ முடிகிறது.. ஏன் இந்த கேவலமான சீன், வெறும் பரபரப்புக்காக எடுத்தார்களா என்பது புரியவில்லை.
புகார்
குறும்படம் ரிலீஸாகாத நிலையில் அதில் வரும் காட்சியை யார் கசியவிட்டது என்பதை கண்டுபிடிக்குமாறு அனுராக் கஷ்யப் மும்பை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
ராதிகா
சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிர்வாண வீடியோவை பார்த்தேன், அது காமெடியாக இருந்ததால் சிரித்தேன். நான் ரொம்ப பிசி. என்னால் நேரத்தை வீணடிக்க முடியாது. இது போன்றவைகளால் நானும், எனது குடும்பத்தாரும் பாதிக்கப்படுவது இல்லை என்கிறார் ராதிகா.
கவலை இல்லை
வீடியோவை பார்த்து கவலை அடையவில்லை. உலகில் ஏராளமானோர் வேலை இன்றி உள்ளனர். அவர்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு நினைத்ததை செய்கிறார்கள். அதனால் இந்த வீடியோவை பார்த்துவிட்டு புகார் அளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று ராதிகா தெரிவித்துள்ளார்.
துணிச்சல்
நிர்வாண செல்ஃபி வந்தபோதும் ராதிகா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது அவரே நிர்வாணமாக நடித்த காட்சி கசிந்துள்ளபோதும் அவர் கவலை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.