பச்சைக் கலரு பளீரென ஃபிகரு.. பிரபல நடிகை வெளியிட்ட தாறுமாறான புகைப்படங்கள்!
சென்னை : தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிரபலமாக உள்ளவர் நடிகை அதிதி ராவ்.
காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது ஹே சனாமிகா படத்தில் நடித்து வருகிறார்.
பெரும்பாலும் மாடர்ன் டிரஸ்ஸில் வந்து இணையதளத்தை கலக்கும் இவர் இப்பொழுது பச்சை சேலையில் பளபளவென இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தாறுமாறாக வைரலாகி வருகிறார்.

ரீ-என்ட்ரி கொடுத்து
2007 ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீரிங்காரம் படத்திற்கு பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தொடர்ந்து பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அதிதி ராவ் நீண்ட இடைவேளைக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை படத்தில் நடித்து மீண்டும் தமிழ் சினிமாவுக்கு ரீ-என்ட்ரி கொடுத்து முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார்.

மிகப்பெரிய பட்ஜெட்டில்
இதைத் தொடர்ந்து மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்திருந்த இவருக்கு இப்பொழுது தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து வர, ஆர் எக்ஸ் 100 படத்தை இயக்கிய இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் மஹாசமுத்ரம் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வர இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ளது. மேலும் இதில் சித்தார்த், சர்வானந்த் மற்றும் அனு இமானுவேல் ஆகியோர் நடிக்கின்றனர்.

ஹே சனாமிகா
சைக்கோ படத்தின் வெற்றிக்கு பிறகு இப்பொழுது நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர் இயக்கும் ஹே சனாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் இதுவரை மாடர்ன் உடையில் வந்து ரசிகர்களை ஆசுவாசப்படுத்தி சென்றதை பார்த்த பலரும் இப்பொழுது சேலையில் இருக்கும் போட்டோக்களை பார்த்து அசந்து போயுள்ளனர்.

பூக்களுக்கு நடுவே
அதில் பச்சை கலரில் ஜொலிக்கும் சேலையில் பாதி மாராப்பை நழுவ விட்டு முன்னழகு தெரிய ஸ்லீவ்லெஸ் சட்டையில் , கொண்டையில் தலை நிறைய மல்லிகை பூவுடன் பார்க்கும் போதே மணக்க, பூக்களுக்கு நடுவே அடக்க ஒடுக்கமாக உட்கார்ந்துகொண்டு பார்க்கும் அனைவரின் கண்களும் பட்டு போகும் அளவிற்கு கொள்ளை அழகில் இருக்கும் அதிதி ராவ்வின் இந்த தாறுமாறான பச்சை சேலை புகைப்படங்கள் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











