Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
படுக்கைக்கு செல்ல மறுத்ததால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அதிதி
விசாகப்பட்டினம்: பாலியல் தொல்லையால் 8 மாதங்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்ததாக நடிகை அதிதி ராவ் ஹைதரி தெரிவித்துள்ளார்.
பாலியல் தொல்லை குறித்து துணிச்சலாக பேசிய நடிகைகளுக்கு நடந்ததை பார்த்து மற்றவர்கள் அமைதியாகியுள்ளனர். இந்நிலையில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி துணிச்சலாக பேசியுள்ளார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி பேசியதாவது,
சினிமா
என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். அந்த வதந்திகள் எல்லாமே உண்மை என்பது எனக்கு தெரியாது. (பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது). அது எல்லாம் நடந்து கொண்டிருந்தது.
நம்பிக்கை
எனக்கு அப்படி ஒன்றும் மோசமாக நடக்கவில்லை. இருப்பினும் ஒரு சம்பவம் நடந்தது. அதனால் நான் பெரிதாக பாதிக்கப்படவில்லை. இருந்தாலும் இது அல்லது அது என்று எனக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. நான் அப்படி ஒன்றும் பட வாய்ப்பு தேவை இல்லை என்று நினைத்து நடையை கட்டிவிட்டேன். அதன் பிறகு எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன்.
சம்பவம்
அந்த சம்பவத்திற்கு பிறகு 8 மாதங்களாக எனக்கு வேலை இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் அது குறித்து பேச அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். அவர்கள் தயாராக இருந்தால் மட்டுமே அது குறித்து பேச வேண்டும். அப்படி பேசவில்லை என்றால் ஓ, பணம் வாங்கியிருப்பார், இல்லை என்றால் மிரட்டி அமைதியாக இருக்குமாறு கூறியிருப்பார்கள் என்று மக்கள் பேசுவார்கள்.
அதிதி
தங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதை தான் தான் செய்ய வேண்டும். மீ டூ இயக்கம் வேறு மாதிரியாக திசை திரும்புகிறது. நீ பேச வேண்டும். இல்லை என்றால் விட்டுக் கொடுத்துவிடுகிறாய் என்று அர்த்தம் என்பது போன்று சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அதிதி. பாலியல் தொல்லை குறித்து அதிதி பேசுவது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே