twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஐஸ்வர்யா வீட்டில் எரிமலை வெடிக்க காரணம் யார் தெரியுமா?: தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க

    By Siva
    |

    மும்பை: ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் தனது கதாபாத்திரம் கவர்ச்சியானதாகத் தான் இருக்க வேண்டும் என்று கூறியது ஐஸ்வர்யா ராயாம்.

    கரண் ஜோஹார் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூர், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோர் நடித்துள்ள ஏ தில் ஹை முஷ்கில் படம் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது.

    படத்தில் ரன்பிர் கபூர், ஐஸ்வர்யா ராய் நெருக்கமாக வரும் காட்சிகள் தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    பச்சன்கள்

    பச்சன்கள்

    ஐஸ்வர்யா ராய், ரன்பிர் கபூருடன் ஓவர் நெருக்கமாக வரும் காட்சிகளை பார்த்து அவரது மாமனார் அமிதாப் பச்சன், கணவர் அபிஷேக் பச்சன் ஆகியோர் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    கரண்

    கரண்

    கரண் ஜோஹார் ஐஸ்வர்யா ராயிடம் படத்தின் கதையை கூறியபோது பொறுமையாக கேட்ட அவர் எனது கதாபாத்திரத்தில் கொஞ்சம் மாற்றம் வேண்டும். என் கதாபாத்திரம் செக்ஸியாக இருக்க வேண்டும் என்றாராம்.

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா

    ஐஸ்வர்யா ராயே கேட்ட பிறகு தான் அவர் ரன்பிர் கபூருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் வைக்கப்பட்டதாம். இந்த உண்மை தெரிந்த பிறகு பாலிவுட்டில் உள்ளவர்களால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

    அமைதி

    அமைதி

    ஐஸ்வர்யா ராய் இப்படி ரன்பிர் கபூருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை நீக்குமாறு பச்சன்கள் கரண் ஜோஹாரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. ஐஸ்வர்யாவே விரும்பிக் கேட்டு நடித்ததால் தான் அவர் அந்த காட்சிகளை நீக்கவில்லை.

    English summary
    According to reports, it is Aishwarya Rai who asked Karan Johar to make her character bold in ‘Ae Dil Hai Mushkil’.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X