Don't Miss!
- News பாமக+அமமுக+ ஓபிஎஸ்.. அண்ணாமலை கணக்கு.. கூட்டிகழிச்சு பார்த்தால், தப்புமா.. அல்லது தப்பாகுமா?
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
பிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க!
Recommended Video
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்த் மீண்டும் தனது கவர்ச்சி போட்டோக்களை வைரலாக்கியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகைகளுக்கு அந்த நிகழ்ச்சி மூலம் நல்ல பிரபலமும் விளம்பரமும் கிடைத்தது. ஆனால் அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கிறதா என்றால் சந்தேகம்தான்.
காரணம் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்ற ஓவியா முதல் பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற பல நடிகைகளாக இருக்கட்டும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மிக சொற்ப படங்களில் தான் நடித்துள்ளனர்.
எல்லை மீறும் கவர்ச்சி
இதனால் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி தங்களின் இருப்பை ஞாபகப்படுத்தி வருகின்றனர். அதிலும் இப்போதெல்லாம் அவர்களின் கவர்ச்சி எல்லை மீறி செல்கிறது.
சாக்ஷி, ரேஷ்மா, அபிராமி
அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்ற நடிகைகள் அனைவரும் சினிமா வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர். சாக்ஷி, ரேஷ்மா, அபிராமி உள்ளிட்டோர் விதவிதமாக போட்டோ ஷுட்களை நடத்தி அவற்றை வைரலாக்கினர்.
ஐஸ்வர்யா தத்தா
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற நடிகைகளும் தொடர்ந்து போட்டோ ஷுட் நடத்தி வருகின்றனர். அண்மையில் ஐஸ்வர்யா தத்தா படு கிளாமராக போட்டோ ஷுட் நடத்தினார் இது தொடர்பான வீடியோக்கள் வைரலானது.
ரித்விகா போட்டோ ஷுட்
இதேபோல் பிக்பாஸ் சீசன் 3 டைட்டில் வின்னரான ரித்விகாவும் போட்டோ ஷுட் நடத்தினார். அவர் கிளாமராக சேலை கட்டியிருந்த விதம் சர்ச்சையானது.
கிளாமர் போட்டோஸ்
யாஷிகா ஆனந்த்தும் அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி வருகிறார். அவ்வப்போது அவரின் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டும் வருகிறார். அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் படு செக்ஸியான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
|
எது நல்லாருக்கு?
பெரிதாக அணிகலன்கள் ஒன்றும் அணியாமல், மெருன் நிற ஸ்ட்ராப்லஸ் உடையில் நெஞ்சை நிமிர்த்தி படு செக்ஸியாக போஸ் கொடுத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். மூன்று விதமாக போஸ் கொடுத்துள்ள யாஷிகா எந்த போட்டோ நன்றாக இருக்கிறது என்றும் தனது ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.
|
ஏன்னு உங்களுக்கே தெரியும்
அவரது கேள்விக்கு மூன்றும் செமயாக இருப்பதாக பதிலளித்துள்ள நெட்டிசன்கள், முதல் போட்டோதான் செம செக்ஸியாக உள்ளது என டிவிட்டி வருகின்றனர். மேலும் முதல் போட்டோ ஏன் எங்களுக்கு பிடித்திருக்கிறது என உங்களுக்கே தெரியும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.