Don't Miss!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாமனார், மாமியார் புடை சூழ வெளியே வந்த 8 மாத கர்ப்பிணி ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார். நீண்ட காலம் கழித்து அவர் கர்ப்பிணியாகியுள்ளதால் அவரது குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக அவரைப் பார்த்துக் கொள்கின்றனர். அவருக்கு இரட்டைக் குழந்தை பிறக்கலாம் என்று கூறப்படுகிறது.
கர்ப்பம் தரித்த நாள் முதல் வெளி நிகழ்ச்சிகளுக்கு வராமல் வீட்டோடு இருந்து வந்தார் ஐஸ்வர்யா. இந்த நிலையில் தனது மாமனார், மாமியார் சகிதம் அவர் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
முதலில் சஞ்சய் தத் நடத்திய நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பின்னர் துர்கா பூஜையில் அவர் பங்கேற்றார்.
துர்கா பூஜையில் அவர் இளம் பிங்க் நிற சேலையில் அழகுற வந்திருந்தார். மேடிட்ட வயிற்றில் அவர் தாய்மை பொங்க மேலும் அழகுடன் காட்சி அளித்தார். இந்த சேலை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஸ்கிரீன் திரைப்பட விருது விழாவில் ஐஸ்வர்யாவின் மாமியார் ஜெயா பச்சன் அணிந்திருந்த சேலையாகும்.
நவம்பர் மாதத்தில் ஐஸ்வர்யாவுக்குக் குழந்தை பிறக்கும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் பச்சன் குடும்பமே பரவசத்துடன் புதிய ஜூனியர்களைக் காண ஆவலோடு காத்திருக்கிறது.