Don't Miss!
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஜஸ்பா படத்தில் போராடும் அம்மாவாக ஐஸ்வர்யா
மும்பை: குழந்தை பிறந்த பின்னர் சுமார் 5 வருடங்கள் கழித்து நடித்து வரும் ஜஸ்பா படத்தில் குழந்தையைத் தொலைத்து விட்டு போராடும் அம்மாவாக வருகிறார் நடிகை ஐஸ்வர்யாராய்.
ஜஸ்பா படத்தில் கதைப் படி இளம் வக்கீலாக வரும் ஐஸ்வர்யா இவரது குழந்தை ஒரு கட்டதில் காணாமல் போக குழந்தையைத் தேடி இவர் செல்லும் பாதையும் சந்திக்கும் போராட்டங்களும் தான் கதை.
பெண் குழந்தையைக் கண்டுபிடிப்பது போல் செல்லும் இந்தக் கதை பெண்ணியத்தையும் அதன் சக்தியையும் விவரிக்கும் என்று கூறுகிறார்கள், படத்தின் முதல் பார்வை போஸ்டரில் சிட்டிஸ்கேப் பின்னணியில் ஐஸ்வர்யா இருப்பது போல வடிவமைக்கப் பட்டிருந்தது.
அதன் அர்த்தம் நகரங்களின் கோரப்பிடியில் இருந்து தனது மகளை மீட்கும் அடையாளம் போலத் தோன்றுகிறது, படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் கேன்ஸ் திரைப் பட விழாவில் வெளியிடப் பட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
திருமணத்திற்குப் பின் மீண்டும் நடிக்க வரும் நடிகைகளுக்கு தற்போது எல்லா மொழிகளிலும் முக்கியதுவம் அளிக்கப் பட்டு கதைகள் உருவாக்கப் படுகிறது இந்திய சினிமா மாற்றங்களை எதிர்கொள்ள ஆரம்பித்து விட்டது போல,தமிழ்ல ஜோதிகா , மலையாளத்தில மஞ்சு ,கன்னடத்தில பிரியங்கா, இப்போ ஹிந்தியில ஐஸ்வர்யா ராய்.
நீங்க கலக்குங்க ஹீரோயின்ஸ்...