twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கணவருடன் பிரச்சனை என்றால் ஐஸ்வர்யா ராய் இப்படி செய்வாரா?

    By Siva
    |

    Recommended Video

    8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய், அபிஷேக் சேர்ந்து நடிக்க உள்ளார்- வீடியோ

    மும்பை: 8 ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

    ஐஸ்வர்யா ராயும், நடிகர் அபிஷேக் பச்சனும் மணிரத்னத்தின் ராவண் படத்தில் கடைசியாக ஒன்றாக சேர்ந்து நடித்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை.

    Aishwarya Rai, Abhibhek to act together after 8 years

    இந்நிலையில் குலாப் ஜாமூன் என்ற படத்தில் ஐஸ்வர்யா தனது கணவருடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறியதாவது,

    குலாப் ஜாமூன் படத்தில் நடிக்க நானும், அபியும் சம்மதம் தெரிவித்துள்ளோம். இந்த பட வாய்ப்பு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போதே சேர்ந்து நடிக்கும் ஐடியா பிடித்திருந்தது. ஆனால் அபி குட்டி பிரேக் எடுக்க விரும்பினார். அதன் பிறகு அவர் மன்மர்சியான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டார்.

    தற்போது தான் குலாப் ஜாமூன் படத்தில் நடிக்க நேரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் கதை மிகவும் அழகானது என்றார்.

    ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்சனை என்று கிசுகிசுக்கப்படும் நிலையில் அவர்கள் சேர்ந்து நடிக்க உள்ளனர்.

    English summary
    Aishwarya Rai and hubby Abhishek Bachchan have come together for a movie after eight long years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X