Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீண்டும் கதை கேட்க ஆரம்பித்தார் ஐஸ்வர்யா ராய்!
அப்படிப்பட்டவர் திடீரென்று குழந்தை, குடும்பம், ரெஸ்ட் என்று அடைபட்டுக் கிடப்பாரா என்ன... இதோ, குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் முடியும் முன்பே, அடுத்த படத்துக்கான கதையைக் கேட்க ஆரம்பித்துள்ளார்.
எப்படியும் நாளையே நடித்துவிடப் போவதில்லை. கதை கேட்டு, நடிகர்கள் முடிவாக படம் தொடங்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும்... அதற்குள் பழைய வனப்பையும் உடல்நிலையையும் பெற்று விடுவோம் என்ற நம்பிக்கைதான் ஐஸ்வர்யாவுக்கு.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடம்தான் என்றல்ல, ஆக்ஷன் த்ரில்லர் கதைகளாக இருந்தாலும் ஓகே என்று கூறியுள்ளதால், முன்பு ஐஸ்வர்யா ராயை மனதுக்குள் 'ஃபிக்ஸ்' பண்ணி வைத்திருந்தவர்கள் மீண்டும் தங்கள் கதைகளை தூசு தட்ட ஆரம்பித்துள்ளனர்.
சமீபத்தில் அபிஷேக் பிறந்த நாள் விழாவுக்கு வந்த பலரும், அபிஷேக்கு வாழ்த்து சொல்வதைவிட, ஐஸ்வர்யாவுக்கு கதை சொல்ல எப்போது வரட்டும் என்று கேட்பதிலேயே ஆர்வம் காட்டினார்களாம்.
இது தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்ச நாள் வெயிட் பண்ணியிருக்கலாமே என்று யோசிக்கிறாராம், முன்பு ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாகப் போட்டு, பின் அவர் கர்ப்பம் என்பதால் படத்தையை கைவிட்ட மதுர் பண்டார்கர். இப்போது அந்தப் படத்தில் கரீனா நடிப்பது குறிப்பிடத்தக்கது.