Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புதுப்படம் தோல்வி... ஐஸ்வர்யா ராய்க்கு ரூ 3 கோடி நஷ்டம்!
திருமணம், குழந்தை என்று செட்டிலான பிறகு மீண்டும் ஹீரோயினாகவே நடிக்க வந்த பலரும் பெரும் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். அந்த லிஸ்டில் சேர்ந்திருக்கிறார் முன்னாள் டாப் நடிகையான ஐஸ்வர்யா ராய்.
குழந்தைப் பிறந்த பிறகு 3 ஆண்டுகளாகப் படங்களில் நடிக்காமலிருந்த ஐஸ்வர்யா ராய், சில மாதங்களுக்கு முன், ஜஸ்பா என்ற படத்தில் நடித்தார்.
இந்த படத்துக்கு பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. இந்த படத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய்க்கு 4 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. அதில் ரூ.1 கோடி முன் பணமாகப் பெற்றுக் கொண்ட ஐஸ்வர்யா, மீதி 3 கோடி ரூபாயை படம் முடிந்த பிறகு பெற்றுக் கொள்வதாக உறுதி அளித்தார்.
ஆனால் அந்த பணம் படம் முடிந்த பிறகும் அவருக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஐஸ்வர்யாராய் புறக்கணித்தார். இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தைகள் நடந்தன. படம் வெளியான பின்பு லாபத்தில் ஐஸ்வர்யாராய்க்கு பங்கு தரப்படும் என்று கூறப்பட்டது.
இதற்கு ஒப்புக் கொண்டு சமரசமானார் ஐஸ்வர்யா ராய். ஆனால் படம் வெளியாகி படுதோல்வி அடைந்துவிட்டது. இதனால் அந்த ரூ 3 கோடி அவருக்கு கிடைக்காமலே போய்விட்டது.
இனி கோர்ட் கேஸ் என அலையணுமா என யோசிக்கிறாராம் ஐஸ்வர்யா ராய்.